இந்தியாவின் மிகப்பெரிய பறவைகள் சரனாலயமான வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் பற்றிய ஒரு சிறப்பு பார்வை - A special look at India's largest bird sanctuary, Vedanthangal Bird Sanctuary : -

இந்தியாவின் மிகப்பெரிய பறவைகள் சரனாலயமான
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் பற்றிய ஒரு சிறப்பு பார்வை : -

              வேடந்தாங்கல் தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டம், அச்சரபாக்கம் ஊராட்சி ஒன்றியம், வேடந்தாங்கல் ஊராட்சியில் அமைந்துள்ள ஒரு ஊர். இவ்வூரில் உள்ள பறவைகள் சரணாலயம் மிகவும் புகழ்பெற்றது. இங்கு ஆண்டுதோறும் உலகின் பல பகுதிகளில் இருந்தும் பறவைகள் வருகின்றன. இவ்விடத்திற்கு கனடா, சைபீரியா, பங்களாதேசம், பர்மா, ஆஸ்ரேத்திரேலியா முதலிய நாடுகளில் இருந்து பறவைகள் வருகின்றன. அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் இங்கு தங்கி முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கும்.



             இங்கு வரும் பறவைகளில் நீர்க்காகங்கள், பலவித கொக்குகள், நாரைகள், கூழைக்கடா, நீர்க்கோழி போன்றவை குறிப்பிடத்தக்கவை.


வரலாறு - History : -

              இந்தியாவின் சிறிய பறவை புகலிடங்களில் (மொத்தப் பரப்பு 40 ஹெக்டேர் மட்டுமே) ஒன்றாகவும் மிகவும் பழமை வாய்ந்ததுமான வேடந்தாங்கல், சிறப்பான வரலாற்றைப் பெற்றுள்ளது. வெகு நாட்கள் முன்னிலிருந்தே இக்கிராமத்து மக்கள் பறவை எச்சங்கள் வயல்வெளிகளுக்கு இயற்கை உரங்களாக இருக்கும் என்பதை உணர்ந்திருந்தனர்.

               இங்கு, சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னிலிருந்தே பல்வேறு நாடுகளில் இருந்து பறவைகள் வந்து சென்றுள்ளன. 1700 ஆம் ஆண்டுகளில் கிராம உள்ளூர் பண்ணையார்கள் பறவைகளை வேட்டையாடும் இடமாக இது இருந்துள்ளது. அவர்களைத் தொடர்ந்து, 18 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் வேட்டையாடி பொழுதை கழிக்க வேடந்தாங்கலை பயன்படுத்திக் கொண்டனர். வேடந்தாங்கல் என்றால் வேடர்களின் கிராமம் என்று அர்த்தம். கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க 1797 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த இலயோனசு பிளெசு என்பவர் வேடந்தாங்கலைப் பறவைகள் சரணாலயம் என்று ஆய்வு செய்து பத்திரம் வெளியிட்டார்.


வேடந்தாங்கலைப் பற்றிய பொதுவான கருத்துக்கள் : - 

               வேடந்தாங்கலுக்கு குடிபெயர்ந்து வரும் பறவைகள் உள்ளன எனினும், அவையனைத்தும் இங்கு இனப்பெருக்கம் செய்வதில்லை; ஏனெனில், ஒரு பறவையினம் எங்கு இனப்பெருக்கம் செய்கின்றதோ அதுவே அதன் தாய்நாடாகும். அதாவது ஒரு பறவை இந்தியாவில் இனப்பெருக்கம் செய்தால் அது இந்தியத்துணைக்கண்டப் பறவை என்று தான் இனங்காட்டப்படும். 



               வேடந்தாங்கலுக்கு வரும் ஐரோப்பியப் பறவையினங்களான ஊசிவால் வாத்து (Northern pintail), உள்ளான் (Common sandpiper), பழுப்பு வாலாட்டி (Grey wagtail), Blue-winged teal போன்றவை ஐரோப்பியக் குளிரைத் தவிர்ப்பதற்காக பலவிடங்களுக்கு செல்லும்; வழியில் இங்கும் வந்து செல்லும். அதாவது, அவை தம் இனப்பெருக்கவிடமான அவற்றின் தாய்நாட்டிலிருந்து உணவிடமான குடிபெயர் நாட்டிற்குச் செல்கின்றன.

ஒரு சுவையான நிகழ்வு - A delicious event : -

              பல வருடங்களுக்கு முன்னர் வேடந்தாங்கலில் ஒரு குருவி  சுடப்பட்டு கீழே வீழ்ந்தது; அதன் கால்களில் மாஸ்கோ என்று பதிக்கப்பட்ட ஒரு வளையம் (பறவைகளின் இயக்கம் பற்றி அறிய பறவையியலாளர்கள் அணிவிக்கும் வளையம்) இருந்தது; அதிலிருந்துதான் சைபீரியாவிலிருந்து அரியவகைப் பறவைகளும் அலபாமா ஊசியிலைக்காடுகளில் இருந்து இணையைத் தேடி சில பறவைகளும் இங்கு வருவதாக ஒரு நம்பிக்கை இருந்து வருகிறது. இது உண்மையான கருத்தல்ல. 2014ஆம் ஆண்டில் மட்டும் 35,000 பறவைகளுக்கு மேல் இங்கு வந்து சென்றுள்ளன. அதோடு 1,45,212 மக்கள் வந்து பறவைகளைக் கண்டு சென்றுள்ளனர்.


வேடந்தாங்கலுக்கு வரும் வலசைப் பறவைகள் -Migratory birds that come to Vedanthangal : -


  • கிளுவை
  • ஊசிவால் வாத்து
  • நீலச்சிறகி
  • தட்டைவாயன்
  • பச்சைக்காலி
  • பவளக்காலி

வேடந்தாங்கலில் காணப்படும் உள்நாட்டுப் பறவைகள் சில -  Some of the indigenous birds found in Vedanthangal : -

  • உண்ணிக்கொக்கு
  • சின்னக் கொக்கு
  • சிறிய நீர்க்காகம்
  • கூழைக்கடா
  • மஞ்சள் மூக்கு நாரை
  • பாம்புத்தாரா
  • வெள்ளை அரிவாள் மூக்கன்
  • மடையான்
  • நத்தை குத்தி நாரை
  • முக்குளிப்பான்
  • கொண்டை நீர்க்காகம்
  • வக்கா
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை பற்றிய வேறு ஒருசில தகவல்கள் : -


          நம்மில் எத்தனை பேர் நம் வாழ்வில் ஒரு முறையாவது பறவையாக வேண்டும் என்று கனவு காணாதிருப்போம்? அவர்களைப் போல பறந்து செல்ல முடியும், சுற்றுப்புறத்திலிருந்து உணவைக் கண்டுபிடித்து, பரந்த காடுகளுக்கு நடுவில் உயரமான மரங்களில் கூடுகட்ட முடியும் என்று நாம் கற்பனை செய்திருக்கலாம். 



        இருப்பினும், நாம் பறவைகளாக இருந்திருந்தால், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை விட, நாம் வாழ விரும்பும் சில சிறந்த இடங்கள் உள்ளன. பல்வேறு வகையான பறவைகளுக்கு பாதுகாப்பான புகலிடமாக உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இந்தியாவின் சிறந்த வகைகளில் ஒன்றாக மதிப்பிடப்படும் இடமாகும்.

          தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 74 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து கிடக்கும் வேடனந்தாங்கல் பறவைகள் சரணாலயம் பறவை ஆர்வலர்கள் மற்றும் காதலர்கள் இந்த பறக்கும் இன்பங்களைக் கண்டு களிப்பதற்கும், நேரத்தை செலவிடுவதற்கும் சிறந்த இடமாகும். இந்த சரணாலயம் 1798 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்டது மற்றும் அது முதல் மிகவும் கவர்ச்சிகரமான இடமாக இருந்து வருகிறது.

         சரணாலயத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கான பறவைகள் பறக்கும் காட்சி, சில உயரமான இடங்களிலும் மற்றவை தாழ்வான இடங்களிலும், உண்மையில் பார்ப்பதற்கு ஒரு சிறப்பானதாக உள்ளது. இந்த பகுதியில் இருந்து புலம்பெயர்ந்த பறவைகள் உட்பட 4000 க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்குள்ள சில இனங்களில் சாம்பல் வாக்டெயில், கார்கேனி, நீல இறக்கைகள் கொண்ட டீல், காமன் சாண்ட்பைப்பர், பின்டெயில், பாம்பு பறவைகள், மூர்ஹென்ஸ், டார்டர்ஸ், ஸ்பாட்-பில்ட் வாத்து, பெரிய ஈக்ரெட்ஸ், லிட்டில் ஈக்ரெட்ஸ், பெயிண்ட்டு நாரைகள், மண்வெட்டிகள், கிரே பெலிகன்கள், கார்மோரண்ட்கள் மற்றும் பல. விரிவான பட்டியல் செல்கிறது.


         இந்த அற்புதமான பறவை இனங்கள் தவிர, இந்த வறண்ட, பசுமையான புதர்க்காடுகள் மற்றும் முள் காடுகளும் குரங்குகளின் தாயகமாகும். தமிழ்நாட்டுக்கான உங்கள் பயணத்தில் நீங்கள் தவறவிட முடியாத ஒரு இலக்கு இது.



"This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"


Post a Comment

أحدث أقدم