தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் மிகவும் பிரபலமான இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் பற்றிய ஒரு சிறப்பு பார்வை...A special look at the Rameswaram Ramanathaswamy Temple, the most famous temple in Tamil Nadu........

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் மிகவும் பிரபலமான இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் பற்றிய ஒரு சிறப்பு பார்வை.....


கோயில் அமைவிடம் - Temple Location : -

      மதுரையிலிருந்து கிழக்கே சுமார் 161 கி. மீ., தொலைவில் வங்காள விரிகுடா கடற்கரையில் ராமேஸ்வரம் எனுமிடத்தில் அமைந்துள்ளது. இராமேசுவரம் இராமநாதசுவாமி திருக்கோயில் (Ramanathaswamy Temple) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில், ராமேஸ்வரத்தில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இத்தலத்தில் இராவணனைக் கொன்ற பாவம் தீர இராமன் வழிபட்டார். இக்கோயிலின் மூலவர் பெயர் ராமநாதசுவாமி, அம்மன் பெயர் பர்வத வர்த்தினி.




கோவில் வரலாறு - Temple History : –

                இராவணனிடமிருந்து சீதையை மீட்க, இராவணனிடம் போர் புரிந்து அவனை கொன்றார் ராமன். ராவணன் பிராமணன் ஆதலால் ராமனுக்கு பிரம்மஹத்தி தோஷம் வரக்கூடாது , என்பதற்காகவும் இராவணனைக் கொன்ற பாவத்தினை நீங்க ராமன் மணலால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிசுடை செய்தார். எனவே ராமனே ஈசுவரனை வணங்கியதால் இக்கோயில் மூலவர் சிவபெருமானுக்கு இராம நாத சுவாமி என்றும் ராமேசுவரம் அதாவது இராம ஈசுவரம் என்றும் பெயர் பெற்றது. இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி ராமநாதரை வழிபட்டால் பாவங்கள் நீங்கி வாழ்வு வளம்பெருகும் என்பது இந்து தர்ம நம்பிக்கை.

           காசி, இராமேசுவரம் யாத்திரை செல்பவர்கள் முதலில் ராமேசுவரத்தில் அக்னி தீர்த்தத்தில் நீராடி, மணல் மற்றும் தீர்த்தம் எடுத்துக்கொண்டு காசி சென்று, கங்கை தீர்த்தத்தில் மணலை போட்டுவிட்டு, காசி விசுவநாதருக்கு அக்னி தீர்த்ததை அபிசேகம் செய்து, காசியிலிருந்து கங்கை தீர்த்தம் எடுத்து வந்து, ராமநாதருக்கு அபிசேகம் செய்ய வேண்டும்.


அம்மன் சன்னதி - Amman Shrine : -

            இங்கு கோயில் கொண்டுள்ள அம்மன் பெயர் பர்வத வர்தனி அம்மன். பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்கரம் உள்ளது. சக்தி பீடங்களில் இத்தலம், சேதுபீடம் ஆகும். அம்பிகைக்கு சித்திரைப் பிறப்பன்று மட்டும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்கின்றனர். அம்மன் சன்னதி பிரகாரத்தில் வீடணன் அமைத்த ஆதிசேசன் மீது பள்ளி கொண்ட கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார்.

         அம்பாள் சன்னதியில் அஷ்டலட்சுமி மற்றும் மேற்கு நோக்கிய சண்டிகேஸ்வரி ஆகியோர் உள்ளனர்.

          முதல் பிரகாரத்தில் சீதை அமைத்த மணல் லிங்கத்திற்கு ராமர் பூஜை செய்யும் சன்னதி அமைந்துள்ளது.

          பல்லாயிரக்கணக்கான ருத்ராட்சங்கள் சேர்த்து பின்னப்பட்ட பந்தலில் நடராசர் காட்சி தருகிறார். யோகக் கலையில் தேர்ச்சி பெறவும், நாகதோச நிவர்த்திக்காகவும், இந்த சன்னதியில் நாகவடிவில் உள்ள பதஞ்சலி முனிவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

       இரு லிங்கங்களுக்கு மத்தியில் சரசுவதி, சங்கரநாராயணர், அர்த்தநாரீசுவரர், ஏகாதச ருத்ர லிங்க சன்னதிகள் அமைந்துள்ளது.


கோயில் அமைப்பு  - Temple Structure : -

            தென்னிந்திய கோயில்களைப் போலவே இக்கோயிலும் நான்கு பெரிய மதில்களால் சூழப்பட்டது. கிழக்கிலிருந்து மேற்காக 865 அடி நீளமும், வடக்கிலிருந்து தெற்காக 657 அடி நீளமும் கொண்டு, கிழக்கு மற்றும் மேற்காக இரண்டு பெரிய கோபுரங்களைக் கொண்டது, கிழக்கு கோபுரத்தை 17ஆம் நூற்றாண்டின் இறுதியில் சேதுபதி மன்னரின் முதலமைச்சர் முத்திருளப்பபிள்ளையால் கட்டப்பட்டது. உலகிலேயே நீளமான பிரகாரங்கள் கொண்டுள்ள இக்கோயிலின், கிழக்கு மற்றும் மேற்கு வெளிப் பிரகாரங்களின் நீளம் தனித்தனியே 400 அடிகள், வடக்கு மற்றும் தெற்கு வெளிப்பிரகாரங்களின் நீளம் தனித்தனியே 640 அடிகள் ஆகும். கிழக்கு, தெற்கு உட்பிரகாரங்களின் நீளம் முறையே 224 அடிகள் மற்றும் வடக்கு, தெற்கு உட்பிரகாரங்களின் நீளம் முறையே 352 அடிகளாலும். மொத்த பிரகாரங்களின் நீளம் 3850 அடி ஆகும். வெளிப்பிரகாரங்களில் மட்டும் 1200 தூண்கள் உள்ளன.

            கர்ப்பகிரகத்தில் உள்ள ஆதிசங்கரர் பிரதிசுடை செய்த படிக இலிங்கத்திற்கு நாள் தோறும் காலை 5 மணி முதல் ஆறு மணி வரை பாலாபிசேகம் செய்யப்படுகிறது.

            கோயிலின் பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரத்தின் தற்போதைய 1212 தூண்களுடன் கூடிய இந்த பிரகாரம் 690 அடி நீளம், 435 அடி அகலம், 22½ அடி உயரம் கொண்டது.


முக்கிய திருவிழாக்கள்  - Major festivals : -

  • மகாசிவராத்திரி
  • மார்கழி திருவாதிரை
  • பங்குனி உத்திரம்
  • திருக்கார்த்திகை
  • ஆடி அமாவாசை
  • தை அமாவாசை
  • மகாளய அமாவாசை

திருக்கோயிலில் உள்ள 22 தீர்த்தம் - 22 Theerthams in the temple : -


வ.எண்தீர்த்தங்கள் விபரம்வ.எண்தீர்த்தங்கள் விபரம்
1மகாலட்சுமி தீர்த்தம்12கெந்தமாதன தீர்த்தம்
2சாவித்திரி தீர்த்தம்13பிரமஹத்தி விமோசன தீர்த்தம்
3காயத்திரி தீர்த்தம்14கங்கா தீர்த்தம்
4சரஸ்வதி தீர்த்தம்15யமுனா தீர்த்தம்
5சங்கு தீர்த்தம்16கயா தீர்த்தம்
6சக்கர தீர்த்தம்17சர்வ தீர்த்தம்
7சேது மாதவர் தீர்த்தம்18சிவ தீர்த்தம்
8நள தீர்த்தம்19சாத்யாமமிர்த தீர்த்தம்
9நீல தீர்த்தம்20சூரிய தீர்த்தம்
10கவய தீர்த்தம்21சந்திர தீர்த்தம்
11கவாட்ச தீர்த்தம்22கோடி தீர்த்தம்



திருக்குட நன்னீராட்டு விழா  - Thirukkudam Nannirattu Festival : -


           இராமேசுவரம் கோயிலின் முதல் திருக்குட நன்னீராட்டு விழா (கும்பாபிசேகம்) 1948இல் நடைபெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இரண்டாவது திருக்குட நன்னீராட்டு விழா 1975யிலும், மூன்றாவது திருக்குட நன்னீராட்டு விழா 2001யிலும் நடைபெற்றது. 14 ஆண்டுகளுக்குப் பின் அடுத்த திருக்குட நன்னீராட்டு விழா நான்காவது திருக்குட நன்னீராட்டு விழா மற்றும் புதியதாக கட்டப்பட்டுள்ள வடக்கு மற்றும் தெற்கு கோபுரங்களுக்கான கும்பாபிசேகம் 20.01.2016 அன்று நடைபெற்றது.


விவேகானந்தரின் வருகை - Vivekananda's visit : -

          விவேகானந்தர் 1897 ஜனவரி 27 ஆம் தேதி ராமேஸ்வரத்திற்கு வருகை தந்து ராமநாத சுவாமியை வணங்கி ஆற்றிய சொற்பொழிவில், அன்புதான் சமயம். உடல், உள்ளம் இரண்டும் சுத்தமில்லாமல் சிவனை வழிபடுவதால் ஒரு பலனும் இல்லை. எனவே உடல் மற்றும் மன சுத்தத்துடன் தன்னை பிரார்த்திப்பவர்களின் கோரிக்கைகளுக்கு சிவன் செவிசாய்க்கிறார் என்றார்.


இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவிலுக்கு அருகில் பார்க்க வேண்டிய ஒருசில இடங்கள் : -

  • ராமேஸ்வரம்
  • அக்னி தீர்த்தம்
  • கோதண்டராமர் கோயில்
  • இராமர் பாதம்

அக்னி தீர்த்தம் - Agni Theertham : -

            அக்னி தீர்த்தம் இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரத்திலுள்ளது. இது இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலில் அமைந்துள்ள 23 தீர்த்தங்களுள் ஒன்றாகும். இந்த தீர்த்தத்தில் ஆண்டுதோறும் இலட்சக்கணக்கானோர் நீராடுகின்றனர்.

        இராமேசுவரம் தீவின் தென் கோடியான தனுசுகோடியின் கிழக்கு கடற்கரைப் பகுதியே புராணங்களில் அக்னி தீர்த்தமாக் கூறப்பட்டுள்ளது.இங்கு பித்ரு தர்ப்பணம் செய்வது புண்ணியமாக கருதப்படுகிறது.  இங்கிருந்து நீரை எடுத்து ஆதி சங்கரர் தற்போதுள்ள அக்னி தீர்த்தத்தில் பிரதிட்டை செய்தார்.

        தனுசுகோடியின் கிழக்கே வங்காளவிரிகுடாவில் மூன்று பக்கம் கடலால் சூழ்ப்பட்டும் ஒரு புறம் நிலமாகவும் அமைந்துள்ளது.இந்த இடம் அமைந்துள்ள இடம் சதுப்பு நிலமாக உள்ளது. சில நேரங்களிள் கடல் அலை அதிகமாகும் பொழுது இந்த நிலப்பரப்பு நீருக்குள் மூழ்கி விடுகிறது.  இங்கிருந்து இலங்கை மிக அருகில் உள்ளது. கழுத்தளவு நீரில் இறங்கி நடந்தே இலங்கை சென்று விடலாம் என்று நம்பப்படுகிறது.  1964ல் இங்கு ஏற்பட்ட புயலுக்குப் பின் இந்த கடல் பகுதி ஆபத்து நிறைந்த கடல் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இராமர் பாதம் - Rama's patham : -

              இராமர் பாதம் அல்லது கந்த மாதன பர்வதம், இந்தியாவின் தமிழ்நாட்டில் இராமேஸ்வரத்திற்கு வடக்கில் 2.5 கி.மீ, தொலைவில் இராமர் பாதம் எனப்படும் கந்த மாதன பர்வதம் என்ற மணல் குன்று உள்ளது. இராமர் கடலைக் கடந்து இலங்கை செல்லுமுன், இங்குள்ள குன்றில் தங்கினார் என்று தல புராணம் கூறுகிறது. இக்குன்றின்மேல் அமைந்துள்ள மண்டபத்தில் ஸ்ரீராமரின் பாதங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோயில் அமைந்துள்ளது. இராமர் பாதம் சன்னதி எதிரில் உள்ள கருடனுக்கு சிறு சன்னதி அமைந்துள்ளது.

          இயற்கை எழில்சூழ்ந்த இடத்தில் அழகிய மணல் மேட்டில் இக்கோவில் உள்ளது ராமேஸ்வரம் கோவிலுக்கு வரும் பலர் இக்கோவிலுக்கு தவறாமல் சென்று வருகின்றன இந்துக்கள் கடவுளாக வழிபடும் ராமனின் மனைவி சீதையை ,ராவணன் இலங்கைக்கு கடத்தி சென்ற பின் ராமபிரானும் ,லட்சுமணனும், அனுமான் சேனைகளுடன் ,ராமேஸ்வரம் கெந்த மாதன பர்வதம் என்னும் இடத்தில் நின்று இலங்கை செல்ல கடலில் பாலம் அமைப்பது என ஆலோசனை செய்ததாக ராமாயண காவியத்தில் கூறப்பட்டுள்ளது

        ராமர் நின்ற இடத்தில் அவரது இரு பாதத்தை வைத்து பூஜிக்க முடிவு செய்த விஜய நகர சாம்ராஜிய மன்னர்கள் 1480ஆம்ஆண்டுக்கு முன் ,ராமர் பாதம் கோவிலை உருவாக்கி தரிசனம் செய்தனர் ராமேஸ்வரத்தின் நிலமட்டத்தில் இருந்து 60மீ., உயரத்தில் ,மணல் மேட்டில் அமைந்துள்ள இக்கோவில் ,சுண்ணாம்புபவள பாறைகளால் கட்டப்பட்டது.

        இராமேஸ்வரத்தில் 530 ஆண்டுகளாக கம்பிரரமாக காட்சியளிக்கும் ராமர் பாதம் கோவில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் நிர்வாகம் கட்டுபாட்டில் உள்ளது .


கோதண்டராமர் கோயில் - Kothandaram Temple : -


              கோதண்டராமர் கோயில் (Kothandaramaswamy Temple), ராமேசுவரத்திலிருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் 12 கி.மீ., தூரத்தில், வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா ஆகிய இரு கடல்களுக்கு நடுவில் உள்ள தனுஷ்கோடி தீவில் அமைந்துள்ளது.

          இராமாயணத்தில், விபீசணன் தன் சகோதரன் ராவணனிடம், சீதையைக் கவர்ந்து வந்தது தவறு என்றும், அவளை ராமரிடமே ஒப்படைக்கும்படியும் அறிவுரை கூறினார். ராவணன் அதை ஏற்க மறுத்ததுடன், வீடணனை காலால் மிதிக்கச் சென்றார் .இதனால் வெறுப்புற்ற வீடணன் ராமருக்கு உதவி செய்வதற்காக ராமரிடம் சரணாகதி அடைந்தார். வீடணனை தன் தம்பியாக ஏற்றுக்கொண்ட ராமன், இலங்கையை வெற்றி பெறும் முன்பாகவே, இலங்கை வேந்தனாக பட்டாபிஷேகம் செய்து வைத்தார். வீடணனை பட்டாபிஷேகம் நடந்த இடத்தில், ராமருக்கு அமைக்கப்பட்ட கோயில் கோதண்டராமர் கோயில் ஆகும். இக்கோயிலில் ராமபிரான் அருகில் விபீஷணன் வணங்கியபடி இருக்கிறார்.

         கோதண்டராமர் கோயிலில் ராமர், இலக்குவன், சீதை ஆகியோர் உற்சவ மூர்த்திகளாக காட்சி தருகின்றனர். ஆனி மாதத்தில் ராமலிங்க பிரதிஷ்டை விழா, வைகுண்ட ஏகாதசி, ராம நவமி மற்றும் ஆடி அமாவாசை ஆகிய நாட்களில் உற்சவம் நடைபெறும்.

      இராமாயணத் திருவிழாவின் போது, ராவணன் சீதையை கவர்ந்து செல்லுதல், அவனை ஜடாயு தடுத்தல், ஆஞ்சநேயர் இலங்கை செல்லுதல், ராமன் ராவணனை வீழ்த்துதல், விபீஷணருக்கு பட்டாபிஷேகம் செய்தல், ராமர் லிங்கப் பிரதிஷ்டை செய்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தி காண்பிக்கப்படும்.


ஓம் நமோ நாராயனாயா ......  ஓம் நமோ நாராயனாயா ...... 


"This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"




Post a Comment

أحدث أقدم