தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரு சுற்றுலா தளமான புதிய மற்றும் பழைய பாம்பன் பாலம் பற்றிய ஒரு சிறப்பு கட்டுரை - A special article about the New and Old Pamban Bridge, a tourist attraction located in Tamil Nadu : -

நமது தமிழ்நாட்டில் அமைந்துள்ள  ஒரு புகழ்பெற்ற சுற்றுலா தமான புதிய மற்றும் பழைய பாம்பன் பாலம் பற்றிய ஒரு சிறப்பு கட்டுரை -


பழைய பாம்பன் பாலம்  - Old Pamban Bridge : -

                பாம்பன் பாலம் (Pamban Bridge) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு கடல்வழி தொடர் வண்டி பாலமாகும். பாக்கு  நீரிணையில் ( பாக்கு நீரணை பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.) அமைந்துள்ளள இந்தப் பாலம், இந்திய பெருநிலப்பரப்பையும், இராமேசுவர தீவையும் இணைக்கின்றது.


       

                1914 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த இக்கடல் பாலத்தில், கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக பாலதின் நடுவில் திறக்கும் கத்திரி வடிவ தூக்குகள் அமைந்துள்ளன. ஏறத்தாழ 2.3 கி.மீ. நீளமுள்ள இது இந்தியாவின் முதல் கடல் பாலம் ஆகும். 2010 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள பாந்திரா-வொர்லி கடற்பாலம் திறப்பதற்கு முன்பு வரை இது இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமாக இருந்தது. பாம்பன் தொடர் வண்டி பாலத்திற்கு அருகில் 1988 ஆம் ஆண்டு ஒரு சாலை போக்குவரத்துப் பாலம் திறக்கப்பட்டது.

              2020 ஆம் ஆண்டில், தற்போதுள்ள பாலத்திற்கு அருகில் ஒரு புதிய பாலத்தை கட்டும் பணி தொடங்கியது. 2022 ஆம் ஆண்டு டிசம்பரில், கடல் அரிப்பின் காரணமாக தொடருந்துப் பாலம் பலவீனமடைந்ததால், பாலத்தின் மீது தொடர் வண்டி போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.


பாலத்தின் வரலாறு - History of the bridge : -

               19 ஆம் நூற்றாண்டில் இலங்கையுடனான வர்த்தகத்தை அதிகரிப்பதற்கான வழிகளை பிரித்தானிய நிர்வாகம் ஆராய்ந்தது. இதன் விளைவாக 1870 ஆம் ஆண்டு இந்திய நிலப்பகுதியுடன் பாம்பன் தீவை இணைக்கும் பாலத்திற்கான திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டன. இதன் கட்டுமானம் 1911 ஆம் ஆண்டு ஆகஸ்டு  மாதம் தொடங்கியது. இந்தக் கடற்பாலம் 24 பிப்ரவரி 1914 ஆண்டு, அன்று தொடருந்துப் போக்குவரத்துக்காக  திறக்கப்பட்டது. இதன் மூலம் பாம்பன் தீவில் உள்ள ராமேஸ்வரம் இந்தியாவின் பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கப்பட்டது.

               1964 ஆம் ஆண்டில் பாம்பன் தீவை தாக்கிய பெரும் புயல் மற்றும் சூறாவளியின் போது இந்தப் பாலம் பலத்த சேதமடைந்தது. இதனை சரி செய்ய விரிவான பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளயப்பட்டு , பாலம் சரி செய்யப்பட்டது . பாம்பன் தொடருந்துப் பாலத்திற்கு அருகில் உள்ள சாலைப் போக்குவரத்திற்கான பாலம் 1988 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.



               2009 ஆம் ஆண்டில், அதிக எடையுள்ள சரக்கு இரயில்களைத் தாங்கும் வகையில் பாலத்தை பலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. 13 ஜனவரி 2013 ஆண்டு அன்று ஒரு கடற்படை படகு பாலத்தில் மோதியதால் ஏற்பட்ட சேதத்தால் பாலத்தின் சில தூண்களை சரிசெய்ய வேண்டியிருந்தது. இதன் நூற்றாண்டு விழா 2014ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. 2016 ஆம் ஆண்டு இந்திய அரசின் ரயில்வே அமைச்சகம் ₹25 கோடி  செலவில் பாலத்தை நவீனமாக்கும் திட்டத்தை அறிவித்தது. 2018 டிசம்பரில் பாலத்தின் தூண்களில் பிளவு ஏற்பட்டதையடுத்து, பழுதுபார்ப்பதற்காக தொடருந்து இயக்கம் நிறுத்தப்பட்டது. பின்னர் பாலம் சரி செய்யபட்டதற்கு பிறகு மார்ச் 2019 இல் தொடருந்துப் போக்குவரத்துக்கு மீண்டும் தொடங்கியது..

             2020 ஆம் ஆண்டில், இந்திய அரசு பழைய பாம்பன் பாலத்தின் அருகே 50 cro செலவில் புதிய ரயில் பாலம் கட்டப்படும் என்று அறிவித்தது. 2022 ஆம் ஆண்டு டிசம்பரில், கடல் அரிப்பின் காரணமாக தொடருந்துப் பாலம் பலவீனமடைந்ததால், பாலத்தின் மீது தொடருந்துப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.


பாலத்தின் அமைப்பு - Structure of the bridge : –

               இந்த தொடருந்துப் பாலமானது கடல் மட்டத்திலிருந்து 12.5 m (41 அடி) உயரத்தில் அமைந்துள்ளது மற்றும் 6,776 அடி (2,065 m) நீளமானது. இந்தப் பாலம் 143 தூண்களைக் கொண்டுள்ளது. இந்த இக்கடல் பாலத்தில், கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக நடுவில் திறக்கும் கத்திரி வடிவ தூக்குகள் அமைந்துள்ளன. பாலத்தின் இரண்டு தூக்குகளும் நெம்புகோல்களைப் பயன்படுத்தி கையினால் திறக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 10 பெரிய கப்பல்கள் இப்பாலத்தின் கீழே செல்கின்றன.

               பாம்பன் பாலம் உலகின் மிகவும் அதிக அளலில் துருப்பிடிக்கத் தக்க மற்றும் கடல் அரிப்பால் வெகுவாக பாதிக்கப்படும் ஒரு சூழலில் அமைந்துள்ளது. இதனால் இதற்கான கட்டுமானப் பணிகள் மிகுந்த சிரமங்களுக்கு இடையிலேயே நடைபெற்றன. மேலும் இந்த இடம் அதிவேக காற்று மற்றும் சூறாவளிகளை எதிர்கொள்ளும் மண்டலமாகவும் உள்ளது. எனவே இதன் பராமரிப்பு ஒரு சவாலான வேலையாக உள்ளது.

               இந்த பாலம் கட்டப்பட்ட போது இதன் மீது ஒரு குறுகிய அகலம் கொண்ட (மீட்டர் கேஜ்) இரயில் பாதை அமைக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டு இந்த பாதை அகல இரயில் பாதையாக மேம்படுத்தப்பட்டது. இந்த இரயில் பாதையானது இந்தியாவின் பிரதான நிலப்பரப்பையும் பாம்பன் தீவையும் இந்தப் பாலம் வழியாக இணைக்கின்றது. முன்னதாக இந்த இரயில் பாதை பாம்பனை அடைந்ததும் இரு பாதைகளாக பிரிந்து ஒன்று ராமேஸ்வரம் நோக்கி சென்றது, மற்றொரு கிளைப் பாதை தனுஷ்கோடியில் முடிவடைந்தது. 1964 ஆம் ஆண்டு சூறாவளியின் போது தனுஷ்கோடிக்கான ரயில் பாதை முற்றிலுமாக அழிக்கப்பட்டது.


புதிய பாம்பன் பாலம் - New Pamban Bridge : -

               புதிய பாம்பன் பாலம் என்பது இந்தியாவின் முதன்மை நிலப்பரப்பில் உள்ள மண்டபம் நகரத்தை பாம்பன் தீவில் உள்ள ராமேஸ்வரம் உடன் இணைக்கும் ஒரு தொடருந்துப் பாலமாகும். இந்தப் புதிய பாலம் 1914 இல் திறக்கப்பட்ட பாம்பன் பாலத்திற்கு அருகில் கட்டப்பட்டு வருகின்றது. 2.07 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த புதிய பாலம் ஏறத்தாழ 100 தூண்களைக் கொண்டுள்ளது.



               2019 ஆம் ஆண்டில், பழைய பாம்பன் பாலம் பாலத்தின் வயது மற்றும் பராமரிப்பில் உள்ள சிரமம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அதற்கு இணையாக ஒரு புதிய பாலத்தை அமைக்க இந்திய ரயில்வே முடிவு செய்தது. 2019 நவம்பரில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இந்தப் பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார். ₹540 கோடி மதிப்பீட்டில் உருவாகும் இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடல் மட்டத்திலிருந்து 12.5 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பாலம், பழைய பாலத்தை காட்டிலும் 3 மீட்டர் உயரமானது. பாலத்தின் நடுவில் உள்ள இரண்டு பதாகைகள் கப்பல்கள் எளிதில் கடந்து செல்ல ஏதுவாக தானியங்கி முறையில் தூக்கும் திறன் கொண்டவை.


பாக்கு நீரிணை பற்றிய சிறிய தொகுப்பு - A short collection about the Baku Strait : -

               பாக்கு நீரிணை (Palk Strait) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தையும் இலங்கைத் தீவின் யாழ்ப்பாணக் குடாநாட்டையும் பிரிக்கும் ஒரு நீரிணையாகும். இது வடகிழக்கே உள்ள வங்காள விரிகுடாவை, தென்மேற்கே உள்ள பாக்கு விரிகுடாவுடன் இணைக்கிறது. இந்நீரிணை ஏறத்தாழ 137 கிலோமீட்டர் நீளமும், 53 முதல் 82 கிலோமீட்டர் அகலமும் கொண்டது. தமிழ்நாட்டின் வைகை உட்படப் பல ஆறுகள் இந்நீரிணையுடன் கலக்கின்றன. இந்தியாவில் கம்பெனி ஆட்சிக் காலத்தில் சென்னை மாகாண ஆளுநராக (1755–1763) இருந்த இராபர்ட் பாக் என்பவரின் பெயரில் இந்நீரிணை அழைக்கபப்டுகிறது.


               இப்பகுதியில் பெரிய கப்பல்கள் செல்வதற்குப் போதிய ஆழமின்மையின் காரணமாக இந்தியாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் இருந்து மேற்கு கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்லும் கப்பல்கள் இலங்கையைச் சுற்றிக்கொண்டு செல்கின்றன. இப்பகுதியை ஆழப்படுத்துவதற்காக 2004 ஆம் ஆண்டு திட்டம் சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் அறிவிக்கப்பட்டது.


வரலாறு - History : -

               1914 ஆம் ஆண்டில் பாம்பன் பாலம் கட்டப்பட்ட பிறகு சென்னையிலிருந்து தனுஷ்கோடிக்கு தொடருந்து மூலம் பயணம் செய்வது சாத்தியமானது. பின்னர் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையிலுள்ள மன்னார் தீவிற்கு படகில் சென்று, அங்கிருந்து கொழும்பு வரை செல்ல தொடருந்துகள் இருந்தன. 1964 இல் ஒரு புயல் தனுஷ்கோடி மற்றும் அதை இணைத்த இரயில் வழித்தடங்களை அழித்தது மற்றும் பாக்கு நீரினை மற்றும் விரிகுடாவின் கரையோரங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. 

               இதற்கு பிறகு அந்த இரயில் இணைப்பு புனரமைக்கப்படவில்லை மற்றும் இலங்கையின் தலைமன்னாரிலிருந்து மகாவிலச்சியா வரையிலான ரயில்பாதை உள்நாட்டுப் போரின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் 1970 களில்  ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே சிறிய படகு போக்குவரத்து மட்டுமே இருந்தது, ஆனால் இதுவும் பின்னர் நிறுத்தப்பட்டது.




                இப்பகுதியில் பெரிய கப்பல்கள் செல்வதற்குப் போதிய ஆழமின்மையின் காரணமாக இந்தியாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் இருந்து மேற்கு கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்லும் கப்பல்கள் இலங்கையைச் சுற்றிக்கொண்டு செல்கின்றன. இந்த பாக் நீரிணை வழியாக கப்பல்கல் செல்ல ஏதுவாக ஆழப்படுவதற்கு 1860 இல் பிரித்தானிய அரசாங்கத்திற்கு ஒரு கோரிக்கை முன்மொழியப்பட்டது. 

               பிறகு இந்த திட்டத்தை செயல்படுத்த பல முறை முயற்சிக்கப்பட்டது. இப்பகுதியை ஆழப்படுத்துவதற்காக 2004 ஆம் ஆண்டு திட்டம் சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், இந்த திட்டம் பல்வேறு மத வட்டாரங்களில் இருந்து எதிர்ப்பை சந்தித்தது. இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் ஒரு சுரங்கப்பாதை அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது. இந்த இணைப்பானது பாக்கு நீரிணைக்கு கீழே கடலுக்கடியில் செல்லும்.


புவியியல் - Geography : –

              பாக்கு நீரிணை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தையும் இலங்கைத் தீவின் யாழ்ப்பாணக் குடாநாட்டையும் பிரிக்கும் ஒரு நீரிணையாகும். இது வடகிழக்கே உள்ள வங்காள விரிகுடாவை, தென்மேற்கே உள்ள பாக்கு விரிகுடாவுடன் இணைக்கிறது. இந்நீரிணை ஏறத்தாழ 137 கிலோமீட்டர் நீளமும், 53 முதல் 82 கிலோமீட்டர் அகலமும் கொண்டது.

            பாக்கு விரிகுடாவின் தெற்கு முனையில் தாழ் தீவுக்கூட்டங்களாலும், ஆழமற்ற பவளப் படிப்பாறைகளாலும் பதிக்கப்பெற்று கூட்டாக ஆதாமின் பாலம் என அழைக்கப்படுகின்றது. இது வரலாற்று ரீதியாக இந்து புராணங்களில் இராமர் பாலம் என்று அறியப்படுகிறது. இந்த சங்கிலி தீவுத் தொடர் தமிழ்நாட்டின் பாம்பன் தீவில் உள்ள தனுஷ்கோடிக்கும் (இராமேசுவரம் தீவு என்றும் அழைக்கப்படுகிறது), இலங்கையின் மன்னார் தீவுக்கும் இடையில் நீண்டுள்ளது. இராமேசுவரம் தீவு இந்திய நிலப்பகுதியுடன் பாம்பன் பாலத்தால் இணைக்கப்பட்டுள்ளது.


  

                   பாக்கு நீரிணையில் எழும் அலைகளின் சராசரி உயரம் 0.5 மீட்டர் ஆகும். இந்த நீரிணையில் பொதுவாக இராமர் பலத்தை சுற்றியுள்ள பகுதிகள் 1-3 மீட்டர் ஆழத்தை கொண்டுள்ளது, அதே சமயம் நீரிணையின் மையப் பகுதி சராசரியாக 20 மீட்டர் ஆழத்தை கொண்டுள்ளது. இதன் அதிகபட்ச ஆழம் 35 மீட்டர் ஆகும். ஏறத்தாழ ஒன்றரை இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் குறைந்ததால் இந்த பகுதி முழுவதும் வறண்ட நிலமாக கடலிலிருந்து வெளிப்பட்டது. பின்னர் ஏழாயிரம் வருடங்களுக்கு முன்பு கடல் மட்டம் உயர்ந்த பொது இந்த பகுதி மீண்டும் நீரில் மூழ்கியது.




"This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"


Post a Comment

أحدث أقدم