உலகில் இரண்டாவது சுவையான குடிநீரான கோவை சிறுவாணி அணை பற்றிய ஒரு சிறப்பு கட்டுரை - A special article on the Siruvani Dam in Coimbatore, the second tastiest drinking water in the world : -

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள சிறுவாணி அணை பற்றிய ஒரு சிறப்பு கட்டுரை - A special article on Siruvani Dam located in Coimbatore district : -


               சிறுவாணி அணை கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில், பாலக்காட்டில் இருந்து 46 கி.மீ தொலைவிலும், தமிழ்நாட்டின் கோயமுத்தூர் நகரிலிருந்து மேற்கே 35 கிமீ தொலைவில் வெள்ளியங்கிரி மலை மற்றும் அதன் தொடர்ச்சியான சிறுவாணி மலையின் மேற்குச் சரிவில் சிறுவாணி ஆற்றில் அமைந்துள்ளது. சிறுவாணி ஆறானது மேற்குத் தொடர்ச்சி மலையின் சிறுவாணி மலையின் மேற்குச் சரிவில் உருவாகி வடக்கு நோக்கி பாய்ந்து பவானி ஆற்றில் கலக்கிறது...

               
                 

             ஆங்கிலேய ஆட்சியின் போது 1890களில் கோவை நகரின் குடிநீர் தேவைக்காக சிறுவாணியின் குறுக்கே அணை கட்டி நீர் கொண்டு வர திட்டமிடப்பட்டது. 1920ல் பாம்பாறு, பட்டியாறு, முத்திக்குளம் அருவியின் நீர் ஆகியவை ஒன்று சேர்ந்து சிறுவாணி ஆறு உருவாகும் பகுதியில் ஒரு சிறிய அணை கட்டப்பட்டு நீர் தேக்கப்பட்டு, மலையைக் குடைந்து 1.6 கி.மீ நீளத்துக்கு குகை அமைத்து மலையைத் தாண்டி கிழக்காக நீர் கொண்டு வரப்பட்டது. 1970களில் கோவை நகரின் அதிகரித்த நீர்த்தேவையை நிறைவேற்ற, தமிழ்நாடு அரசு கேரளத்துடன் ஒப்பந்தம் செய்து பழைய அணைக்கு கீழ்ப்பகுதியில் பெரியதாக தற்போதுள்ள சிறுவாணி அணை கட்டப்பட்டது. 


வரலாறு - History : -        

               பழைய அணை தற்போதைய நீர்த்தேக்கப் பகுதிக்குள் அமைந்துள்ளது. முல்லைப் பெரியாறு அணைத் திட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் போலவே, இத்திட்டம் மூலம் கேரளத்தின் மேற்குத்தொடர்ச்சி மலையின் மேற்குச் சரிவில் பெய்யும் அதிக மழையின் மூலம் கிடைக்கும் நீர் அணை மூலம் தேக்கப்பட்டு, குறைந்த மழை பொழியும் கிழக்குச் சரிவுப் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த அணையைச் சுற்றியும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகவும் குடியிருப்புகள் இன்றியும் உள்ளதால் நீர் மிகவும் தூய்மையாக உள்ளது. 

               ஆண்டு முழுவதும் நீரோட்டம் உள்ள முத்திக்குளம் அருவியிலிருந்தே அதிக நீர் கிடைக்கிறது. இந்த அணையும் அருவியும் மிகவும் எழில் வாய்ந்த பகுதியில் அமைந்துள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ளதால் அணைக்கு பொதுமக்கள் செல்வதற்கு வனத்துறை அனுமதி பெற வேண்டும்.

           


             வெள்ளியங்கிரி மலையின் முகட்டிலிருந்து நோக்கினால் சிறுவாணி மலைக்கு மேற்கே கல்லடிக்கூடம் மலையிலிருந்து வடக்கு நோக்கி விழும் அழகிய முத்திக்குளம் அருவியை காணலாம். வெள்ளியங்கிரி மலையிலிருந்து பார்க்கும்போது முத்திக்குளம் அருவியில் ஆண்டு முழுவதும் நீர் வருவது தெரிந்ததால், தான் அங்கிருந்து நீர் கொண்டு வர சிறுவாணி அணை திட்டம் உருவாக்கப்பட்டது.


அணை ஒப்பந்தம்  : -

               கோவை  மேற்கு தொடர்ச்சி மலையில், கோவை கேரள எல்லையில் சிறுவாணி அணை அமைந்துள்ளது. சிறுவாணி அணை திட்டம் 1931ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. அப்போது 44 லட்சம் ரூபாய் செலவில் சிறு குட்டை போல் நீர் தேக்கம் அமைக்கப்பட்டது. இங்கிருந்து தினமும் 1 கோடி லிட்டர் குடிநீர் பெறப்பட்டது.

              1949ம் ஆண்டில், 450 மி.மீ விட்டம் கொண்ட இரும்பு குழாய் பதிக்கப்பட்டு காட்டு வழியாக குடிநீர் பெறப்பட்டது. 1954ம் ஆண்டில் சிறுவாணி நீர் தேக்க பரப்பு மேலும் விரிவானது. மாநில சீரமைப்புக்கு பின்னர் சிறுவாணி நீர் ஆதாரம் கேரள மாநிலத்திற்கு சொந்தமாகி விட்டது.

               இந்நிலையில், தமிழக கேரளத்திற்கு இடையே தினமும் 101.4 மில்லியன் லிட்டர் (10.1 கோடி லிட்டர்) குடிநீர் பெறும் வகையில் புதிய ஒப்பந்தம் ஏற்படுத்த கடந்த 26-04-1966ம் தேதி முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், ஒப்பந்தம் நிறைவேற காலதாமதம் ஏற்பட்டது. கடந்த 1973ம் ஆண்டில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

               99 ஆண்டுகள், சிறுவாணி குடிநீரை தமிழக மக்கள் பயன்படுத்தலாம். தேவைப்பட்டால் ஒப்பந்த காலத்தை நீடிக்கலாம் என ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


சிறுவாணி அணை : -

               இந்நிலையில், கடந்த 21-08-1976ம் தேதி தமிழக அரசு 16.16 கோடி ரூபாய் செலவில் புதிய அணை கட்டும் பணியை துவக்கியது. கடந்த 1982ம் ஆண்டில் அணை கட்டி முடிக்கப்பட்டது. திறப்பு விழாவின்றி சிறுவாணி அணை திட்டம் நடைமுறைக்கு வந்தது. சிறுவாணி அணையின் நீர் தேக்க பரப்பு 22.6 சதுர கி.மீ. அணைக்கு முக்தியாறு, பட்டியாறு உள்ளிட்ட 37 ஓடைகளில் இருந்து தண்ணீர் வருகிறது. சிறுவாணி நீர் பிடிப்பில் ஆண்டுதோறும் 1800 முதல் 2100 மி.மீ வரை மழை பெய்கிறது. புதிய அணை கட்டிய பின், வெயில் காலங்களில் அணை வறட்சி நிலைக்கு செல்வது வாடிக்கையானது.

               அணையின் மொத்த நீர் மட்ட உயரம் 15 மீட்டர். நிலமட்டத்திற்கு கீழ் பழங்கால தடுப்பணை மூலமாக 1.5 மீட்டர் வரை குடிநீர் பெறலாம். அணையில் 258 நாட்களுக்கு தேவையான குடிநீரை தேக்க வைக்க முடியும். சிறுவாணி குடிநீரை கோவை மாநகராட்சி, வழியோரத்தில் உள்ள 11 கிராமங்களை சேர்ந்த சுமார் 20 லட்சம் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.




             ஆசியாவின் 2வது தரமான குடிநீர் என யுனெஸ்கோ அறிவித்து, உலக பெருமை பெற்று தந்த போதிலும், வறட்சியால் சிறுவாணி நீர் திட்டம் தோல்விகரமாக மாறி விட்டது. சிறுவாணியில் இரண்டாவது குடிநீர் திட்டத்தை (பெரியாறு ஓடை குடிநீர் திட்டம்) செயல்படுத்த குடிநீர் வடிகால் வாரியம் ஆலோசித்தது. மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்கு எல்லையில், சிறுவாணி அணையின் அடிவாரத்தில் பெரியாறு (காஞ்சிமாநதி) அமைந்துள்ளது. மங்கலம்பாளையம், சின்னாறு (கல் கொத்தி மலை), கோவை குற்றாலம், நண்டங்கரை, முண்டந்துறை அணைக்கு வரும் 30க்கும் மேற்பட்ட நீரோடைகளை ஒருங்கிணைத்து சிறுவாணி 2வது திட்டத்தை செயல்படுத்த யோசனை தெரிவிக்கப்பட்டது.


புதிய சிறுவாணி திட்டம் : -

              இந்த திட்டத்திற்காக சாடிவயல் மரப்பாலம் வனத்தில் நீர் தேக்கம் அமைக்கலாம். இங்கு சிறுவாணியின் பழைய குடிநீர் குழாய் (500 மி.மீ விட்டம் கொண்டது) ஏற்கனவே உள்ளது. இந்த குழாய் மூலமாக குடிநீரை 3 கி.மீ தூரத்திற்கு வனப்பகுதி வழியாக சிறுவாணி சுத்திகரிப்பு நிலையம் கொண்டு செல்ல முடியும். பெரியாற்றில் வரும் நீர்வரத்திற்கு ஏற்ப தினமும் 3 முதல் 4 கோடி லிட்டர் குடிநீர் பெற முடியும் நிலையிருந்தது.

             இந்த திட்டம் அரசின் பரிசீலனையில் இருந்தது. ஆனால் திட்டம் நிறைவேறாமல் பல ஆண்டாக கிடப்பில் போடப்பட்டது. இந்த திட்டத்திற்கு சுமார் 50 கோடி ரூபாய் தேவை என மதிப்பிடப்பட்டிருந்தது. இந்த திட்டத்தை நிறைவேற்றினால் நகரில் 24 மணி நேரம் குடிநீர் வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளாக இந்த திட்டம் கிடப்பில் உள்ளது.

               பில்லூர் அணை நீர் தேக்கத்தில் அடுத்தடுத்த திட்டங்கள் உருவாகி வருகிறது. ஆனால், சிறுவாணி நீர் பிடிப்பு பகுதியில் கூடுதல் குடிநீர் திட்டங்கள் நிறைவேறாமல் இருப்பதால் மக்கள் தவிப்படைந்துள்ளனர். நொய்யல் ஆற்றுக்கு பாயும் நீர் குறைந்து விடும். எனவே, புதிய குடிநீர் திட்டங்கள் சிறுவாணி அடிவார பகுதியில் உருவாக்க முடியவில்லை என குடிநீர் வாரியத்தினர் தெரிவித்தனர்.


கோவை சிறுவாணி உருவான கதை  : - 


              1800 ஆண்டுகளின் இறுதியில் கோவையின், மக்கள் தொகை பெருகி வந்தது.

               சரியான சாக்கடை, மழைநீர் வடிகால் வசதிகள் இல்லாததால் சுகாதாரக் கேடுகள் மலிந்திருந்தன. குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடியது. குடிநீர் பஞ்சத்தைப் போக்க 1889லேயே சிறுவாணி குடிநீர்திட்டத்தை எஸ்.பி. நரசிம்மலு நாயுடு, மாவட்ட மன்றக் கூட்டத்தில் முன்வைத்ததுடன் அதற்கான ஆய்வறிக்கையையும் சமர்ப்பித்தார். ஆனால், நிதிப்பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் இத்திட்டம் கைவிடப்பட்டது. 1903 ல் பிளேக் நோய் பரவி ஊரே காலியாகி, பலர் இறக்கும்வரை எந்தத் திட்டங்களும் தீட்டப்படவில்லை. பிறகு நொய்யலாறு, சித்திரைச்சாவடி வாய்க்கால் ஆகியவற்றில் இருந்து குடிநீர் கொண்டு வரும் திட்டம் பரிசீலிக்கப்பட்டு, பின்னர் கைவிடப்பட்டது.

              அடுத்து வந்ததுதான் சிறுவாணியை ஆதாரமாகக் கொண்டு மின்சார உற்பத்தியுடன் இணைந்த குடிநீர் வழங்கும் திட்டம். இடையில் பைகாரா நீர்மின் திட்டத்தால் சிறுவாணி திட்டத்தில் மீண்டும் தொய்வு ஏற்பட்டது. இறுதியில், ஒரு வழியாக, 1920 ல் சிறுவாணி வேலைகள் மீண்டும் உயிர்பெற்றன. முத்திகுளம் பள்ளத்தாக்கில் சிறுவாணி நதியின் குறுக்கே ஒரு அணையைக் கட்டி, பெறப்படும் நீரை ஒரு குகைப்பாதை வழியாக ஆணையாறு நீருடன் சேர்த்து, அவற்றை ஒரு தொட்டியில் சேமித்து, கோவை நகருக்கு நீர் வழங்குவது என்பதே சுருக்கமான திட்ட வரைவாகும்.

               ஒரு லட்சம் பேருக்குத் தேவையான குடிநீர் வழங்கும் எதிர்காலத் திட்டத்தோடு இது அமைக்கப்பட்டது. 1928ல் முடிக்கப்பட உத்தேசிக்கப்பட்டிருந்த இத்திட்டம் 1928ல் ஏற்பட்ட நிலச்சரிவில், நீர் வெளியேறும் குழாய்ப்பகுதி முற்றிலும் சிதைந்து போனதால், பணிகள் அப்படியே நிறுத்தப்பட்டன. பிறகு, மறுபடியும், திட்டம் தொடங்கி பணிகள் நடந்து கொண்டிருந்தபோது, பெரிய குடிநீர் பஞ்சம் ஏற்படுவதற்கான சூழல்கள் தோன்றியிருந்தன. பணிகள் முடிக்கிவிடப்பட்டு வேகவேகமாக நடந்தேறின. சம்பிரதாயப்படி, சர் தாமஸ் மோயர் 1929 ஏப்ரல் மாதத்தில் சிறுவாணி குடிநீர் வழங்கலைத் தொடங்கி வைத்தார்.




               சிறுவாணித் திட்டத்துக்கான மொத்த செலவில் பாதியை அரசும், மீதியை நகராட்சி நிர்வாகமும் பகிர்ந்து கொண்டன. கோவை மாநகராட்சி செலவுகளைச் சமாளிக்க முதன்முதலாக தண்ணீர் வரி விதிக்கப்பட்டது. ஒரு உள்ளாட்சி நிர்வாகத்தின் சாதனையாக, இன்றுவரை சிறுவாணி குடிநீர்த்திட்டம் போற்றப்பட்டு வருகிறது.பல்வேறு இடையூறுகளைத் தாண்டி சிறுவாணி குடிநீர் திட்டத்தை நிறைவேற்றிய பெருமை, நகராட்சி மன்றத் தலைவர் சி. எஸ். ரத்தினசபாபதி முதலியாரையே சேரும்.


இந்தியாவின் கேரளாவின் பாலக்காட்டில் உள்ள சிறுவாணி அணை மற்றும் நீர்வீழ்ச்சிகளின் அமைதியை ஆராய்தல்.


               சிறுவாணி அணை மற்றும் நீர்வீழ்ச்சிகள் இயற்கை ஆர்வலர்களுக்கும், பரபரப்பான நகர வாழ்க்கையிலிருந்து விலகி அமைதியை நாடும் பயணிகளுக்கும் ஒரு அற்புதமான இடமாகும். கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தப் பகுதி, அதன் அழகிய அழகுக்கும், சிறுவாணி நதியின் இனிமையான சுவைக்கும் பெயர் பெற்றது. தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் நகரத்தின் குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கேரள அரசால் இந்த அணை தமிழ்நாட்டிற்காகக்  கட்டப்பட்டது.


சிறுவாணி சுற்றுலாவின் வரலாறு : -

               சிறுவாணி அணை மற்றும் நீர்வீழ்ச்சிகளின் சுற்றுலா வரலாறு 1984 ஆம் ஆண்டு அணை கட்டி முடிக்கப்பட்டதிலிருந்து தொடங்குகிறது. அதன் திறப்பு விழாவிற்குப் பிறகு, அணைப் பகுதி அதன் சிறந்த இயற்கை அழகு மற்றும் குளிர்ந்த, புத்துணர்ச்சியூட்டும் காலநிலை காரணமாக பார்வையாளர்களை ஈர்க்கத் தொடங்கியது. பல ஆண்டுகளாக, அதன் நற்பெயர் வளர்ந்ததால், இந்த தளம் படிப்படியாக சுற்றுலாவில் வளர்ச்சியை அனுபவித்து, கேரளாவின் சுற்றுலா நிலப்பரப்பில் மிகவும் விரும்பப்படும் இயற்கை இடங்களில் ஒன்றாக மாறியுள்ளது.


சிறுவாணியில் உள்ள சுற்றுலாத் தலங்கள் : -

                சிறுவாணி அணை மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு வருபவர்கள் பசுமையான நிலப்பரப்புகள், பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் மற்றும் பாறைகளில் இருந்து நீர் விழும் மயக்கும் காட்சி ஆகியவற்றால் வரவேற்கப்படுகிறார்கள். அணை சுற்றியுள்ள கிராமப்புறங்களின் அற்புதமான காட்சியை வழங்குகிறது, மேலும் நீர்வீழ்ச்சிகள் தளர்வு மற்றும் புத்துணர்ச்சிக்கு ஒரு இனிமையான சூழலை வழங்குகின்றன.


சிறுவாணியில் செயல்பாடுகள் : -

                சுற்றுலாப் பயணிகள் அருகிலுள்ள காப்புக் காட்டில் மலையேற்றம், பறவைகளைப் பார்ப்பது அல்லது நீர்வீழ்ச்சியில் சுற்றுலா செல்வது போன்ற பொழுதுபோக்குகளை அனுபவிக்கலாம். புகைப்பட ஆர்வலர்கள் கேரளாவின் இயற்கை அழகின் சாரத்தைப் படம்பிடிக்க எண்ணற்ற வாய்ப்புகளைக் காண்பார்கள்.




பாதுகாப்பு மற்றும் மேலாண்மை : -

                சுற்றுலாவை மேம்படுத்துவதோடு சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான ஒருங்கிணைந்த முயற்சியின் ஒரு பகுதியாக சிறுவாணி அணை மற்றும் நீர்வீழ்ச்சிகளின் மேலாண்மை உள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகை அந்தப் பகுதியின் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் உள்ளூர் வனவிலங்குகளைப் பாதிக்காமல் இருப்பதை உறுதிசெய்ய முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் நட்பு நடவடிக்கைகள், பார்வையாளர் கல்வி மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட அணுகல் ஆகியவை இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.


சமீபத்திய சுற்றுலாப் போக்குகள் : -

                சமீபத்திய ஆண்டுகளில், கேரளாவில் நிலையான மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலாவை நோக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. சிறுவாணி அணை மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு வருபவர்கள் குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தும் பயணம், சுற்றுச்சூழலுக்கு உகந்த தங்குமிடங்களில் தங்குதல் மற்றும் பாதுகாப்பு முயற்சிகளில் பங்கேற்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்தப் பகுதிக்கு வருகை தரும் போது உள்ளூர் கலாச்சாரம் மற்றும் உணவு வகைகளை அனுபவிப்பதில் வளர்ந்து வரும் போக்கும் உள்ளது.


அணுகல்தன்மை : -

                  சிறுவாணி அணை மற்றும் நீர்வீழ்ச்சிகள் பாலக்காட்டிலிருந்து சுமார் 48 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சாலை வழியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், நீர்ப்பிடிப்புப் பகுதியின் ஒரு பகுதியாக இருப்பதால், நுழைவு வனத்துறையின் அனுமதியைப் பெற வேண்டும். சுற்றுலாப் பயணிகள் அதற்கேற்ப திட்டமிட்டு, நேரங்கள் மற்றும் அனுமதித் தேவைகளைச் சரிபார்க்க வேண்டும்.


பார்வையிட சிறந்த நேரம் : -

              சிறுவாணி அணை மற்றும் நீர்வீழ்ச்சிகளைப் பார்வையிட ஏற்ற நேரம் செப்டம்பர் முதல் மார்ச் வரை ஆகும் , அப்போது பருவமழை குறைந்து வெளிப்புற நடவடிக்கைகளுக்கு வானிலை மகிழ்ச்சியாக இருக்கும். இருப்பினும், கடுமையான மழைக்கால மாதங்களில் இந்தப் பகுதி நிலச்சரிவுகளுக்கு ஆளாகக்கூடும், மேலும் அணையின் நீர்மட்டம் கணிக்க முடியாத அளவுக்கு அதிகமாக இருக்கும் போது வருகை தருவதைத் தவிர்ப்பது நல்லது.

                இறுதியாக, சிறுவாணி அணை மற்றும் நீர்வீழ்ச்சிகளைப் பார்வையிடும் சுற்றுலாப் பயணிகள் பொறுப்பான சுற்றுலா நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் அந்த இடத்தின் புனிதத்தைப் பராமரிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். இது சிறுவாணியின் இயற்கை அழகு வரும் தலைமுறைகளுக்கு மாசுபடாமல் இருப்பதை உறுதி செய்கிறது.




"This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"



Post a Comment

புதியது பழையவை