திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அமராவதி அணை பற்றிய ஒரு சிறப்பு கட்டுரை - A special article on Amaravati Dam located in Tiruppur district : -
Amaravati Dam : -
"அமராவதி அணை (Amaravathi Dam)" இந்தியா, தமிழ்நாடு, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை வட்டத்தில் இருக்கும், இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப் பூங்காவில் அமைந்துள்ளது. உடுமலையிலிருந்து தெற்கே தேசிய நெடுஞ்சாலை 17இல் 25 கிமீ (15.53 மை) தொலைவில் உள்ளது. அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஆழமான அணையால் பரந்த நீர்த்தேக்கம் ஏற்பட்டுள்ளது.
இங்கு தென்னிந்தியாவின் இயற்கைச்சூழலில் வளர்க்கப்படும் மிகப்பெரும் முதலைப் (Mugger Crocodile) பண்ணை உள்ளது. பல்வகை மீன் இனங்களும் இயற்கையாக வளர தகுந்த பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது.
அமராவதி அணை வரலாறு - History of Amaravathi Dam: -
திருமூர்த்தி அணையின் தெற்கே அமராவதி ஆற்றின் குறுக்கே 1957ஆம் ஆண்டு கு. காமராஜ் அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது கட்டப்பட்டது. 4 டி. எம். சி இருந்த நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு தற்போது தூர் சேர்தலால், 3 டி.எம்.சியாகக் குறைந்து விட்டது. இந்த அணை வேளாண்மைக்காகவும் வெள்ளக் கட்டுப்பாட்டிற்காகவும் முதன்மையாகக் கட்டப்பட்டது. 2005 - 2006 நிதியாண்டில் இத்திட்டப் பகுதியில் வணிக விவசாயத்தின் மூலம் கிடைத்த வருமானம் ரூ. 43,51,000 என மாநில அரசு மதிப்பிட்டுள்ளது. 2003-04 ஆண்டில், அணையின் பயன்பாட்டை கூடுதலாக்க தமிழ்நாடு மின்சார வாரியம் 4 மெகாவாட் திறனுள்ள நீர் மின் ஆற்றல் மின் நிலையத்தை அமைக்கத் திட்டமிட்டது. இந்நிலையம் தற்போது இயங்கி வருகிறது.
மீன்வளம் - Fisheries : -
இங்கு உள்ளூரல்லாத திலாப்பியா வகை மீன்கள் 1950களில் விடப்பட்டு 1970களில் மாநிலத்தின் மிக கூடுதலான மீன்பிடி இடமாக விளங்குகிறது. தற்போது இங்கு பிடிக்கப்படும் மீன்களில் பெரும்பான்மையாக திலாப்பியா மீன்கள் உள்ளன. மீன்வலைகள் வீசப்பட்டு மீன்கள் பிடிக்கப்படுகின்றன. ஒரு மீனவர் ஒரு நாளைக்கு 20 கிலோ வரை மீன் பிடிக்க முடிகின்றது.ஆண்டுக்கு 110 டன் மீன்கள் கிடைக்குமென வனத்துறை மதிப்பிடுகிறது. 1972ஆம் ஆண்டில் ஆண்டொன்றிற்கு ஹெக்டேர் ஒன்றிற்கு 168 கிலோ கிடைத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மீன்வளத்துறை இங்குள்ள பழங்குடியினருக்கு மீன்பிடிக்க உரிமை வழங்குமுகமாக அமராவதிநகர் பழங்குடி மீனவர் கூட்டுறவுச் சங்கம் அமைத்துக் கொடுத்துள்ளனர். 2007ஆம் ஆண்டு கரட்டுப்பதி பழங்குடி மக்கள் 50 பேர் இச்சங்கத்தில் இணைந்து அவர்களில் எட்டு பேருக்கு மீன்பிடி உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
முதலைகள் - Crocodiles : -
சேற்று முதலைகள் அல்லது பாரசீக முதலைகள் என அழைக்கப்படும் மக்கர் முதலைகள், இங்கு பிடிபடாத நிலையில் இயற்கையாக விடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இவை மீன்கள் பிற ஊர்வன மற்றும் சிறிய, பெரிய பாலூட்டிகளை உண்டு வாழ்கின்றன. சிலநேரங்களில் மனிதர்களுக்கும் இவை தீங்கு விளைவிக்கக்கூடியவை. இவற்றின் இருப்புத்தொகை 60 பெரியவைகளாகவும் 37 சற்றே இளையவையாகவும் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. இங்குள்ள மீனை உண்டு வாழும் பிற உயிரினங்களாவன சிறு ஓட்டர்கள் (Oriental Small-clawed Otter), இந்திய நீர் காகங்கள், மற்றும் இந்திய ஆமைகள்.
அணையிலிருந்து ஒரு கி.மீ. முன்னரே அமராவதி சாகர் முதலைப் பண்ணை 1976ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு குட்டி முதலைகளை வளர்த்து பெரியவையானதும் இயற்கைச்சூழலில் விடப்படுகிறது. நீர்த்தேக்கத்தின் ஓரமாக காட்டு முதலைகளின் முட்டைகள் எடுத்து வரப்பட்டு, இப்பண்ணையில் குஞ்சு பொறித்து வளர்க்கப்படுகின்றன. இங்கு சிறியதும் பெரியதுமான முதலைகள் ஒன்றின் மேல் ஒன்றாக ஏறி விளையாடுவதைக் காணலாம். இங்கு 98 முதலைகள் (25 ஆண்+ 73 பெண்)பிடிபடு நிலையில் பராமரிக்கப்படுகின்றன.
பூங்கா - park : -
அணையில் அழகான பூங்காவொன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் உயரமான படிகளில் ஏறி ஆனைமலை மற்றும் பழனிமலை பகுதிகளைக் காண இயலும். இது மாவட்ட சுற்றுலா மையமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.
பூங்காவும், முதலைப் பண்ணையும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்துள்ளது. கோவையிலிருந்து பொள்ளாச்சி, உடுமலை வழியாக 96 கிமீ (59.65 மை) தொலைவில் உள்ளது.முதலைப் பண்ணை அருகேயுள்ள வனத்துறை ஓய்வகத்தில் நான்கு பேர் தங்குவதற்கு இடவசதி அமைந்துள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டைக்கு தெற்கே 25 கி.மீ. தொலைவில், இந்திராகாந்தி வனவிலங்கு சரணாலயத்தில், அமராவதி அணைக்கட்டு அமைந்துள்ளது. உபாி நீரை பாதுகாத்து சேமிக்கும் நோக்கில் கி.பி. 1956 ஆம் ஆண்டு அமராவதி ஆற்றின் குறுக்கே இந்த அணை கட்டப்பட்டது. இந்த செங்குத்தான அணையினால் 9.31 கி.மீ. பரப்பும், 33.53 மீட்டா் ஆழம் கொண்ட அமராவதி நீா்த்தேக்கம் உருவாக்கப்பட்டது. தொடக்ககத்தில் நீா்ப்பாசனம், வெள்ளத் தடுப்புக்காக கட்டப்பட்டதாக இருந்தாலும் தற்பொழுது 4 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் நிலைநாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நீா்த்தேக்கத்தல் “மக்கா்” என்ற முதலைகள் பெருமளவில் வசிக்கின்றன. மீன்பிடிப்புப் பகுதியாகவும் இது திகழ்கிறது.
இங்கே பூங்கா ஒன்று அழகாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டின் செங்குத்தான படிக்கட்டுகளில் ஏறிச் சென்று பாா்த்தால், இயற்கைக் காட்சிகள் நம் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும்! வடக்கு பக்கத்தில் கீழே உள்ள பகுதிகளையும், தெற்குப் பக்கத்தில் ஆனைமலை குன்றுகளையும், மேலே பழனி மலையையும் கண்டு களிக்கலாம். மாவட்டத்தின் சுற்றுலாத் தலமாக இந்த இடம் உருவாக்கப்பட்டுள்ளது.
அமராவதி நீர்த்தேக்கம், மேற்குத் தொடர்ச்சி மலைகளின் நடுவே அமைந்துள்ளது, இது இயற்கை மிகுதியின் ஒரு அற்புதமான ரத்தினமாகும். இந்த மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரி, புத்தி கூர்மை மற்றும் துல்லியத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அவர்களின் சாதாரண நடைமுறைகளில் இருந்து ஓய்வு தேடும் பயணிகளுக்கு ஒரு உண்மையான சொர்க்கமாக மாறியுள்ளது. இந்த கம்பீரமான நீர்நிலையானது மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பசுமையான காடுகளாலும் உயர்ந்த மலைகளாலும் சூழப்பட்டுள்ளது. இப்பகுதியை அமைதியின் பிரகாசத்துடன் உட்செலுத்துகிறது.
பொறியியலின் உச்சமான நினைவுச்சின்னமான அமராவதி அணை, 427 மீட்டர் உயரத்துடன் உயரமாகவும் பெருமையாகவும் உள்ளது. மனித புத்திசாலித்தனத்தின் இந்த அற்புதம் 1957 இல் சுற்றியுள்ள பகுதிகளின் மின் உற்பத்தி மற்றும் விளை நிலங்களுக்கு நீர்ப்பாசனம் வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. இது உலகெங்கிலும் இருந்து பார்வையாளர்களை ஈர்க்கும் ஒரு இடமாக உருவெடுத்துள்ளது.
வானத்தின் நீல நிற விதானத்தின் கீழ் பிரகாசிக்கும் நீர்த்தேக்கத்தின் மின்னும் நீர் ஒரு தனி அழகு. ஏரியின் அமைதியும், இலைகளின் மெல்லிய சலசலப்பும், காற்றின் இனிமையான கிசுகிசுக்களும் உங்கள் தோலைத் தழுவி, உங்கள் ஆன்மாவைப் புத்துணர்ச்சியடையச் செய்யும். அன்றாட வாழ்க்கையின் சலசலப்பில் இருந்து ஓய்வு தேடும் பயணிகளுக்கு இது ஒரு மனதை மயக்கும் ஒரு இடமாக அமைகின்றது.
நீர்த்தேக்கத்தைச் சுற்றியுள்ள பகுதி நீரின் அழகு மற்றும் உயரமான அணை ஆகியவற்றால் ஆசீர்வதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், ஏராளமான செயல்பாடுகளையும் கொண்டுள்ளது. படகு சவாரி மற்றும் மீன்பிடித்தல் முதல் மலையேற்றம்/முகாம் வரை, இந்த அமைதியான புகலிடத்தில் அனைவருக்கும் ஏதாவது இருக்கிறது. ஏரியின் அமைதியான நீர் ஒரு நிதானமான படகு சவாரிக்கு அமைதியான அமைப்பை வழங்குகிறது. மேலும் இப்பகுதி ஏராளமான மீன்பிடி வாய்ப்புகளுக்கு புகழ்பெற்றது. கம்பீரமான மஹ்சீர், கெளுத்தி மற்றும் கெண்டை மீன்களைப் பிடிக்கும் வாய்ப்பு உள்ளது.
நீர்த்தேக்கத்தைச் சுற்றியுள்ள மலைகள் சாகசத்தை விரும்புவோருக்கு ஒரு உண்மையான புகலிடமாகும். உயிர்கள் நிறைந்த பசுமையான காடுகள் இந்த மாசுபடாத நிலத்தின் மறைந்திருக்கும் பொக்கிஷங்களை ஆராய்ந்து கண்டுபிடிப்பதற்கான வாய்ப்பை வழங்குகின்றன. பறவைகள் கண்காணிப்பு, முகாம் மற்றும் மலையேற்றம் ஆகியவை துணிச்சலான பயணிகளுக்கு காத்திருக்கும் சில நடவடிக்கைகளாகும். இப்பகுதி ஒரு வளமான மற்றும் மாறுபட்ட சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் இயற்கை ஆர்வலர்கள் பல மறைக்கப்பட்ட அதிசயங்களை ஆராய்ந்து கண்டறியும் வாய்ப்பில் மகிழ்ச்சியடைவார்கள்.
அமராவதி நீர்த்தேக்கம் தமிழ்நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தை பார்க்க விரும்புவோருக்கு ஒரு சிறந்த இடமாகும். இப்பகுதி பல பழமையான கோயில்கள் மற்றும் நினைவுச் சின்னங்களுக்கு தாயகமாக உள்ளது. இது ஒரு வளமான வரலாற்றில் மூழ்கி, பிராந்தியத்தின் பாரம்பரியத்தின் ஆழம் மற்றும் பன்முகத்தன்மைக்கு சாட்சியமளிக்கிறது. அணைக்கு அருகில் அமைந்துள்ள பவானி அம்மன் கோயில் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கலங்கரை விளக்கமாக, மாநிலம் முழுவதிலுமிருந்து பக்தர்களை ஈர்க்கிறது. அருகிலுள்ள நகரமான உடுமல்பேட்டையில் "காலிங்கராயன் அணைக்கட்டு" உட்பட பல வரலாற்று நினைவுச்சின்னங்கள் உள்ளன. இது கி.பி 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இப்பகுதியின் பண்டைய பாரம்பரியத்தின் பிரமிக்க வைக்கும் ஒரு சான்றாகும்.
அமராவதி நீர்த்தேக்கத்தை சுற்றியுள்ள பகுதியில் எண்ணற்ற ஆடம்பரமான ஓய்வு விடுதிகள் மற்றும் ஹோட்டல்கள் ஒவ்வொரு தேவை மற்றும் பட்ஜெட்டை பூர்த்தி செய்கின்றன. ஆடம்பரமான தங்கும் இடங்கள் முதல் அமைதியான முகாம் மைதானங்கள் வரை, இந்த அற்புதமான இடம் செழுமை மற்றும் இயற்கையின் சரியான சமநிலையை வழங்குகிறது.
அமராவதி நீர்த்தேக்கம் இயற்கை அழகு, சாகசம் மற்றும் கலாச்சார முக்கியத்துவம் ஆகியவற்றின் புதையல் ஆகும். இந்த மயக்கும் இடத்துக்குச் சென்றால், அதன் பல சிறப்புகளை ஆராயும் அதிர்ஷ்டம் உள்ள அனைவருக்கும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். வாருங்கள், இந்த ரம்மியமான இடத்தின் அற்புதத்தைக் கண்டுபிடியுங்கள், மேலும் இயற்கையின் அழகில் அதன் அனைத்து மகிமையிலும் மூழ்குங்கள்!
புதுப்பொலிவு பெறும் அமராவதி முதலைப் பண்ணை
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி நகர் முதலை பண்ணை, பள்ளி சிறுவர்களை கவரும் வகையில் புதுப்பொலிவு பெற்று வருகிறது. அமராவதி அணை அருகேசுமார் 12 ஏக்கர் பரப்பளவில் முதலை பண்ணை அமைந்துள்ளது.
ஆசியாவில் அழிந்துவரும் இனமாக கருதப்படும் சதுப்பு நில முதலை இனத்தைபாதுகாக்கும் நோக்கில் இப்பண்ணை தொடங்கப்பட்டு, கடந்த 48 ஆண்டுகளாக வனத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள அமராவதி அணை, படகு சவாரி, சைனிக் பள்ளி உள்ளிட்ட இடங்களைக் காண வரும் சுற்றுலா பயணிகள், முதலை பண்ணையையும் பார்க்க தவறுவதில்லை. அமராவதி அணையைக் காண ஆண்டுக்கு பல லட்சம் பேர் வருகை தருவதாக கூறப் படுகிறது. அணைக்குவரும் வாகனங்களுக்கு பொதுப்பணித்துறையால் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அதேபோல முதலைகள் பண்ணையை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளில் பெரியவர்களுக்கும், சிறுவர்களுக்கும் தனித்தனியே நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. மேலும் வீடியோ கேமரா கொண்டு செல்ல தனி கட்டணம், பார்க்கிங் கட்டணம் என ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் வனத்துறைக்கு வருவாய் கிடைத்து வருகிறது. பொன்விழா கொண்டாட்டத்தை எதிர்கொள்ளும் வகையில் கடந்த 2 ஆண்டுகளாக புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
புல் தரை நடைபாதை, முயல், கொக்கு, மயில், இருவாச்சி பறவை, யானை, புலி, சிறுத்தை, ஒட்டக சிவிங்கி உள்ளிட்ட விலங்குகளின் தத்ரூபமான சிலைகள், பொம்மைகள், முதலைகளின் வகைகள், சதுப்பு நில முதலைகள் முட்டையிடுவது முதல் அதன் ஆயுள் காலம் வரையிலான படங்கள் வரையப்பட்டு, அதற்கான விளக்கங்களும் எழுதப்பட்டுள்ளன.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது: "கல்வி விழிப்புணர்வுக்காகவும், அழியும் நிலையில் உள்ள ஓர் இனத்தை பாதுகாக்கும் நோக்கிலும் இப்பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்,பெண், குட்டிகள் என சுமார் 80 முதலைகள் பராமரிக்கப்படுகின்றன. தினமும் அவற்றுக்கு உணவாக 35 கிலோ மாட்டிறைச்சியும், 14 கிலோ மீன் துண்டுகளும் வழங்கப்படுகின்றன.
சராசரியாக ஒரு முதலைக்கு அரை கிலோ வீதம் உணவு விநியோகிக்கப்படும். இவை அதிகம் உணவு உட்கொள்வதில்லை. வாரத்தில் 6 நாட்கள் உணவு அளிக்கப்படும். ஞாயிற்றுக் கிழமை முதலைக்கு உணவு கொடுப்பது கிடையாது.
சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. லாப நோக்கமின்றி செயல்பட்டு வரும் இப்பண்ணையின் மேம்பாட்டுக்கு அரசின் நிதியுதவி மட்டுமின்றி, தனியார் அமைப்புகளும், தன்னார்வலர்களும் நிதியுதவி அளித்தால் முதலைகள் பண்ணை மேலும் புதுப்பொலிவு பெறும்" என்று கூறினர்...
"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"
கருத்துரையிடுக