ஈரோடு மாவட்டத்தின் முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றான பவானி சாகர் அணைக்கட்டு பற்றிய சிறப்பு கட்டுரை - Special article on Bhavani Sagar Dam, one of the important tourist attractions of Erode district : -

நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியாக வரும் பவானி சாகர் அணைக்கட்டு பற்றிய ஒரு சிறப்பு கட்டுரை : -

 

               கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியாக வரும் பவானி ஆற்றுடன் நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும், மோயாறு கலக்கும் இடத்தில் கீழ் பவானி திட்டம் மூலம் அணை கட்டப்பட்டுள்ளது. இதனால் உண்டான நீர்தேக்கத்திற்கு பவானி சாகர் நீர்தேக்கம் என்று பெயர் பெற்றது. நாடு விடுதலை அடைந்தபிறகு உருவான இத்திட்டம் 1956 இல் நிறைவடைந்தது. இந்த அணை "பவானிசாகர் அணை" என்றே அழைக்கப்படுகிறது. 


               இவ்வணை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் என்ற கிராமத்திற்கு அருகில் கட்டப்பட்டுள்ளது. இது ஒரு மண் அணையாகும். இதன் உயரம் 105 அடி, இதன் கொள்ளளவு 33 கோடி கனஅடியாகும். இதன் நீர்ப்பிடிப்பு பகுதி 1621.5 சதுர மைல் ஆகும். நீர்தேக்கத்தின் பரப்பளவு 30 சதுர மைல்களாகும். அணை உள்ள இடத்தில் உள்ள நகர் அணையின் பெயராலயே பவானிசாகர் என அழைக்கப்படுகிறது, இது ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வணையிலிருந்து செல்லும் கீழ் பவானி திட்ட கால்வாய் ஈரோடு மாவட்டத்தை வளப்படுத்துகிறது.


அணையின் கொள்ளளவும் பாசன வசதியும் : -

               பவானி சாகர் அணையின் கொள்ளளவு 32.8 டி.எம்.சி ஆகும். பவானி சாகர் அணையின் மூலம் புதிய ஆயக்கட்டு 2.07 லட்சம் ஏக்கர் பாசனம் பெறுகிறது. இப்புதிய ஆயக்கட்டு இரு பகுதிகளாக [ ஒற்றை படை, இரட்டை படை மதகுகள்] பிரிக்கப்பட்டு, ஆண்டுதோறும் ஒரு பகுதிக்கு [ 1,03 ,500 ஏக்கர்] நெல்லுக்கும், மறு பகுதிக்கு புஞ்சை பயிருக்கும், மாறி மாறி பாசனம் பெருகிறது. நெல்லுக்கு 24 டி.எம்.சி நீரும், புஞ்சை பயிருக்கு 12 டி.எம்.சி நீரும் ஆகமொத்தம் 36 டி.எம்.சி நீர் தேவை படுகிறது. 

                இவ்வணையின் மூலம் பழைய ஆயகட்டுகளான தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பகுதிகள் பவானி சாகர் அணைக்கு கீழுள்ள கொடிவேரி அணைக்கட்டு மூலமும், காளிங்கராயன் அணைக்கட்டு மூலம், காளிங்கராயன் பாசன பகுதியும், பாசனம் பெருகிறது. அவைகளுக்கு ஆண்டுதோறும் 24 டி.எம்.சி நீர் தேவை படுகிறது. கொடிவேரி அணைக்கட்டு மூலம் 25 ,000 ஏக்கரும் , காளிங்கராயன் அணைக்கட்டு மூலம் 15 ,000 ஏக்கரும், பாசனம் பெறுகிறது.


புனல்மின் நிலையம் - Turbine power station : -

          இந்த அணையில் இரண்டு நீர் மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன, ஆற்றிற்கு நீர் வழங்கிடும் (MHPH) நுண்புனல் மின்நிலையத்தில் 8 மெகாவாட் திறனிலும் (RBC PH) வலதுகரை வாய்க்கால் மின்நிலையத்தில் 8 மெகாவாட் திறனிலும் என மொத்தம் 16 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது.


          16 32 மெகாவாட் (43,000 ஹெச்பி) திறனைக் கொண்டு, மொத்தமாக ஐந்து மெகாவாட் (21,000 ஹெச்பி) ஒரு திறனோடு உள்ளன.


வரலாற்றுச்சிறப்பு - Historical significance : -

               தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணை என்னும் சிறப்பிற்குரியது பவானிசாகர் அணைக்கட்டு. ஆசியாவிலேயே மிக நீளமான மண் அணையும் இதுதான். டணாய்க்கன்_கோட்டை என்றழைக்கப்படும் வரலாற்றுச்சிறப்பு மிக்க ஓர் கோட்டை அணை நீருக்குள் மூழ்கியுள்ளது. கோடைக்காலங்களில் அணையில் நீர் வற்றிய பிறகு அந்தக் கோட்டையை காண இயலும்.

               ஹொய்சாளர் ஆட்சிக்காலத்தில் படைத்தளபதியான பெருமாள் தண்டநாயக்கனைப் பாராட்டி வழங்கப்பட்ட குறுநிலத்தை அவன் ஆண்டு வந்த போது கி.பி 1254ஆம் ஆண்டு ஆற்றுச்சமவெளியில் இந்தக் கோட்டையைக் கட்டி ஆண்டான். தண்டநாயக்கன் கோட்டை நாளடைவில் டணாயக்கன் கோட்டை ஆனது. பல நூறு ஆண்டுகள் ஆன பின்பும் கூட இன்னும் உறுதியுடன் இக்கோட்டை உள்ளது.


கீழ் பவானி திட்ட கால்வாய் - Lower Bhavani Project Canal : -

              கீழ் பவானி திட்ட கால்வாய் என்பது பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்படுள்ள பவானிசாகர் அணையிலிருந்து செல்லும் 125 மைல் நீளமுடைய பாசன வாய்க்காலாகும். இதனால் ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்கள் பயன் பெறுகின்றன. இக்கால்வாயின் மூலம் 2.07 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.



               முதன்மை கால்வாய் அதிகபட்சமாக 2300 கன அடி நீரை கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதன்மை கால்வாயிலிருந்து நீரை வயல்களுக்கு கொண்டு செல்லும் வாய்க்கால்களின் மதகு கன அடிக்கு 60 ஏக்கர் பயன்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

               இக்கால்வாய் ஆண்டுக்கு இரு முறை நீர் பெறுகிறது. பொதுவாக ஆகஸ்ட் 15 முதல் டிசம்பர் 15 வரை ஒரு முறையும் ஜனவரி 1 முதல் ஏப்ரல் 15 வரை மற்றொரு முறையும் நீர் பெறுகிறது. அணையின் நீர் இருப்பை கணக்கில் கொண்டு நீர் திறக்கப்படும் தேதி மாற்றத்துக்குள்ளாகும்.


கான்கிரீட் தளமும் எதிர்ப்பும் - Concrete floor and resistance : -

               2013 ஆம் ஆண்டில், தமிழ்நாடு அரசு கீழ் பவானி கால்வாயின் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை மேற்கொண்டது, இருப்பினும், விவசாயிகள் அதை கடுமையாக எதிர்த்ததால் அந்த திட்டம் கைவிடப்பட்டது . இப்போது மீண்டும் பல ஆண்டுகளுக்குப் பிறகு, கான்கிரீட் தளம் உள்ளிட்ட புனரமைப்புப் பணிகளைக் குறிப்பிட்டு, மே 1, 2023 அன்று இந்தத் திட்டத்தைத் தொடங்க அரசாங்கம் திட்டமிட்டது. இந்ததிட்டம் தொடங்கினால், இது நிலத்தடி நீர் செறிவூட்டலை கடுமையாக பாதிக்கும்.

              இதன் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் சாமானிய மக்களை நேரடியாகப் பாதிக்கும். இதனால் ஒட்டுமொத்த வேளாண் சூழலமைப்பு மற்றும் குடிநீர் வழங்கல் அமைப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்து உள்ளனர். இவ்வாறு கான்க்ரீட் தளம் அமைக்கப்பட்டால் நிலத்தடி நீர் வற்றி நிலம் பாலைவனமாகிவிடும் என்ற கருத்தும் உள்ளது.



              சில விவசாயிகள் கான்கிரீட் தளம் அமைப்பதை ஆதரிக்கின்றனர், ஆனால் இப்பகுதியில் வாழும் பெரும்பாலான விவசாயிகள் கான்கிரீட் தளம் அமைப்பதை எதிர்க்கின்றனர் . இந்த மாவட்டங்களில் குறைந்த மழைப்பொழிவு பெறுவதுடன், அரை வறண்ட பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இந்த கால்வாய் மட்டுமே இங்கு வாழும் அனைத்து மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. பல பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகள் இந்த கால்வாயை நகர்புற மற்றும் ஊரக குடிநீர் விநியோகத்திற்கு நம்பியுள்ளன. இந்த கான்கிரீட்தளம் அமைப்பதற்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடத்தப்பட்டன.


பவானிசாகர் அணை மற்றும் நீர்த்தேக்கம் : -

              பவானிசாகர் அணை மற்றும் நீர்த்தேக்கம், கீழ் பவானி அணை என்றும் அழைக்கப்படுகிறது. இது ஈரோடு மாவட்டத்தில் காவேரி ஆற்றின் முக்கிய கிளை நதியான பவானி ஆற்றின் மீது அமைந்துள்ளது. மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் இந்த அணை, கீழ்பவானி திட்ட கால்வாயில் தண்ணீர் வழங்குகிறது.

               இது உலகின் இரண்டாவது பெரிய மண் அணையாகும் (முதலாவது ரஷ்யாவில் உள்ளது). மண் கட்டையின் உண்மையான நீளம் ஜீரோ பாயிண்டிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த அணை சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் 1948 மற்றும் 1955 க்கு இடையில் கட்டப்பட்டது. இதன் கட்டுமான செலவு 21 கோடி. அணை பல நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. 

                பாசன நோக்கங்களுக்காக நீரை சேமித்து வைப்பதற்கும், மின்சாரம் உற்பத்தி செய்வதற்கும், குடிநீர் வழங்குவதற்கும், வெள்ளத்தை நிர்வகிப்பதற்கும், ஆற்றின் கீழ்பகுதியில் வண்டல் படிவதைத் தடுப்பதற்கும் இது பயன்படுகிறது. இரண்டு நீர் மின் நிலையங்கள் அணையில் ஒன்று பவானி ஆற்றிலும் மற்றொன்று கிழக்குக் கரை கால்வாயிலும் அமைந்துள்ளது. நீலகிரி பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்கு விளிம்பில், இது ஒரு நீண்ட நதி சங்கிலியின் கடைசி இணைப்பாக செயல்படுகிறது. அணையில் இருந்து சராசரியாக 1000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.



              அணையின் முன் ஒரு அழகான, அமைதியான தோட்டம் உள்ளது. இது ரயில் சவாரி, ஊஞ்சல் மற்றும் கொலம்பஸ் சவாரியுடன் குழந்தைகள் விளையாடும் பகுதி. குறுகிய படகுப் பயண வசதி மற்றும் பார்வையாளர்களுக்கு எளிய உணவுப் பகுதியும் உள்ளது. பூங்காவிற்குள் நுழைய ஒவ்வொரு நபரும் ரூ.5 செலுத்த வேண்டும். இந்த அற்புதமான அணை தளம் நகர்ப்புற வாழ்க்கையின் சலசலப்பில் இருந்து அமைதியான பின்வாங்கலை வழங்குகிறது. நீங்கள் மீன்பிடிக்க ஆர்வமாக இருந்தால், அணையிலிருந்து நேரடியாக புதிய மீன்களைப் பிடிக்கலாம். உள்ளே கழிப்பறை வசதிகளும் உள்ளன. அணை தினமும் காலை 9:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை திறந்திருக்கும்.


மாயாறு - mayar : -

              மாயாறு (Moyar) (மோயாறு) தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் ஓடும் ஒரு முக்கிய ஆறு ஆகும். இது முதுமலை பகுதியில் மாயாறு எனப் பெயர் பெற்றாலும் இதன் தோற்றுவாய் நீீீீீீலகிரி மலைகளின் மேற்கு உச்சியான முக்கூர்த்தி மலைப்பகுதியாகும். இங்கிருந்து பைகாரா, முதுமலை,மசினகுடி, தெங்குமரஹாடா வழியாகப் பாய்ந்து பவானி ஆற்றுடன் கலக்கிறது. இவ்விடத்தில்தான் பவானிசாகர் அணை கட்டப்பட்டுள்ளதது. 



          இந்த ஆறு தமிழகம் கர்நாடகத்தின் எல்லைக்கோடாகவும் உள்ளது. நீலகிரி மலையின் மேற்குப் பகுதியில் உருவாகி தென்சரிவையொட்டி பவானி பாய்வதுபோல பவானிக்கருகில் நீலகிரி மலையின் மேற்குப்பகுதியில் உருவாகி வட சரிவையொட்டி பாய்ந்து பவானிசாகர் அணைப்பகுதியில் பவானியுடன் கலக்கிறது.


தண்டநாயக்கன் கோட்டை - Thandanayakan Fort : -

               கருநாடகப் போசள (ஹொய்சள) அரசர்களில் வீரசோமேசுவரன் ஒருவன். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1234-1264 என்னும் குறிப்புள்ளது. இவனது மகன் மூன்றாம் நரசிம்மன். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1263-1292. கருநாடகத்தில் மைசூரை அடுத்துள்ள இன்றைய குண்ட்லுப்பேட்டைப் பகுதி முன்னாளில், தெற்கணாம்பி என்னும் பெயரில் இருந்தது. அதன் உட்பிரிவான பதிநால்கு நாட்டின் தலைவர்களாக இந்தத் தண்ட நாயக்கர்கள் ஆட்சிசெய்தனர். 

               இவர்களில் பெருமாள் தண்ட நாயக்கன் என்பவர், மூன்றாம் நரசிம்மன், மூன்றாம் வீரவல்லாளன் ஆகியோரிடம் பிரதானி என்னும் முதன்மையான ஒரு பதவியில் பணியாற்றியவர். பெருமாள் தண்ட நாயக்கனுக்கு இரு மகன்கள். ஒருவர் மாதப்ப தண்டநாயக்கன். மற்றவர் கேத்தய தண்டநாயக்கன். மாதப்ப தண்டநாயக்கன் மூன்றாம் வீர வல்லாளனின் படைத்தலைவனாக இருந்தவன்.


                மாதப்ப தண்டநாயக்கன் மூன்றாம் வீரவல்லாளன் காலத்தில் டணாயக்கன் கோட்டையை நிறுவினான். மூன்றாம் நரசிம்மன் (கி.பி. 1263-1292) தன் ஆட்சிக்காலத்தில் தன் தந்தை பெயரால் சோமேசுவரன் கோவிலைக்கட்டினான் என்று வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது. பவானிசாகர் அணைப்பகுதியில் மூழ்கிப்போன கோயில்களுள் இக்கோயிலும் ஒன்று எனக்கருதலாம். 

              ஏனெனில், சோமேசுவரர் கோயில் என்னும் பெயருடைய கோயில் நீரில் மூழ்கிய செய்தி பவானி சாகர் அணைப்பகுதிக் கோயிலில் பொறிக்கப்பட்டுள்ளது. இச்செய்தியின் அடிப்படையில், தண்டநாயக்கன் கோட்டையை மாதப்ப தண்டநாயக்கன் கட்டும்போதே, அப்பகுதியில் சோமேசுவரர் கோயில் இருந்துள்ளது என்பது பெறப்படுகிறது. எனவே, தண்டணாயக்கன் கோட்டை கி.பி. 1292-ஆம் ஆண்டுக்குப் பின்னரே கட்டப்பட்டிருக்க வேண்டும்!


"This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"


Post a Comment

أحدث أقدم