கோவை மாவட்டத்தின் மிகவும் முக்கியமான சுற்றுலா தலமான ஈஷா யோகா மையம் பற்றிய ஒரு சிறப்பு கட்டுரை : -
வரலாறு : -
ஈஷா அறக்கட்டளையின் கீழ் 1994 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஈஷா யோக மையம், நீலகிரி மலைத் தொடரின் ஒரு பகுதியான வெள்ளியங்கிரி மலைச்சாரலில், அடர்ந்த காடுகளால் சூழப்பட்டு, ஏராளமான வன விலங்குகள் உறையும் பிரத்தியேகமான வனப்பகுதியின் அருகில், 150 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இது உள்நிலை வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டுள்ள புகழ் வாய்ந்த இந்த சக்தி மையம், ஒரே கூரையின் கீழ் யோகாவின் பிரிவுகளான பக்தி, ஞானம், கர்மா மற்றும் கிரியா ஆகிய அனைத்தையும் வழங்கி உலகெங்கிலும் உள்ள மக்களை ஈர்த்து வருவதுடன், குரு சிஷ்ய பாரம்பரியத்தையும் புதுப்பித்து வருகிறது.
இந்த மையம், நுணுக்கமான கட்டிடக் கலைகள் கொண்ட 64,000 சதுர அடி பரப்பளவுள்ள 'ஸ்பந்தா ஹால்' மற்றும் ஆதியோகி ஆலயம் என்னும் தியான மண்டபங்களை உள்ளடக்கியுள்ளது. மேலும் தியானலிங்கம், தீர்த்தகுண்டம், ஈஷா புத்துணர்வு மையம், ஈஷா ஹோம் ஸ்கூல், மற்றும் குடும்ப சூழ்நிலையில் வாழ்வோருக்கான வானப்பிரஸ்தா குடியிருப்புகள் ஆகியவையும் யோக மையத்தில் அமைந்துள்ளன.
ஈஷா யோகப் பயிற்சிகள் : -
உலகெங்கிலுமுள்ள இதன் 150க்கும் மேற்பட்ட மையங்களில் உள்ள தன்னார்வத் தொண்டர்கள் ஆதரவுடன் ஈஷா அறக்கட்டளை ஆற்றிவரும் பணிகள், மக்கள் ஓர் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு தங்களை மாற்றிக் கொள்ளவும், உறவு முறைகள் மற்றும் தன்னிறைவு நிலைகளை மேம்படுத்திக் கொள்ளவும், தங்களுள் பொதிந்துள்ள முழு ஆற்றலை உணரவும் ஓர் உறுதுணையான சூழ்நிலையை வழங்குகின்றன.
பசுமைக்கரங்கள் இயக்கம் (PGH – Project GreenHands) : -
இத்திட்டம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி, 11.4 கோடி மரக்கன்றுகளை குறுகியகாலத்தில் நட்டு தமிழகத்தின் பசுமைப் போர்வையை 33 சதவீதமாக உயர்த்துவதை இலக்காகக் கொண்டுள்ளது. இந்த பூமி இனிவரும் தலைமுறைகள் இனிது வாழ்வதற்கேற்றபடி, சுற்றுப்புறச் சூழ்நிலையில் தீவிர அக்கறை செலுத்தக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்குவதை இத்திட்டம் நோக்ககமாகக் கொண்டுள்ளது.
2006ம் வருடம் அக்டோபர் 17ம் தேதி அன்று ஒரேநாளில் 2 இலட்சம் தன்னார்வத் தொண்டர்கள் மூலம் 8,52,587 மரக்கன்றுகள் நட்டு இத்திட்டம் கின்னஸ் சாதனை படைத்தது. சுற்றுசூழல் பாதுக்காப்பிற்கு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான 'இந்திரா காந்தி பரியவரண் புரஸ்கார்'-ஐ ஜூன் 2010 இல், இந்திய அரசாங்கம் இத்திட்டத்திற்கு வழங்கியது.
கிராமப் புத்துணர்வு இயக்கம் (ARR – Action for Rural Rejuvenation)
இந்தியக் கலாச்சாரத்தின் அடித்தளமாய் விளங்கும் கிராமங்களில், இயக்கத்தை தொடங்கியது. நடமாடும் மருத்துவ ஊர்திகள் மூலமாக கிராம மக்களுக்கு வழங்கப்படும் இலவச சிகிச்சைகள், ஈஷா கிராம மருத்துவமனைகள், யோகப் பயிற்சி வகுப்புகள், மூலிகைத் தோட்டங்கள், பெண்களுக்குத் தொழிற்பயிற்சிகள், பள்ளி மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்புகள், சுற்றுச்சூழல் விழிப்புணர்வுத் திட்டங்கள் மற்றும் ஆண்கள், பெண்களுக்கான விளையாட்டுக்கள் போன்றவை அனைத்துத் தரப்பு கிராம மக்களையும் தங்கள் வாழ்விற்கு பொறுப்பேற்கச் செய்வதுடன், தங்கள் உச்சபட்ச நலனை அடையும்படியான வாய்ப்பை நல்குகிறது.
ஆரம்பிக்கப்பட்ட இரண்டு வருடங்களிலேயே, இத்திட்டத்தின் மூலம் தென்னிந்தியாவில் 3500 கிராமங்களிலுள்ள சுமார் 17 இலட்சத்திற்கும் மேலான மக்கள் பயனடைந்துள்ளனர். ஈஷா அறக்கட்டளையால் நடத்தப்பட்டு வரும் வெற்றிகரமான ஈஷா கிராமோத்சவம், கிராம மக்களின் திறமை, உற்சாகம் மற்றும் அவர்களின் கலாச்சாரத்தையும் நகர மக்களுக்கு வெளிப்படுத்துவதாக உள்ளது.
2005 புத்தாண்டுத் தருணத்தில் சுனாமி இயற்கைப் பேரழிவினால் பாதிப்படைந்த தமிழக கடலோர மாவட்டங்களில், இலவச நடமாடும் மருத்துவமனைகள் ஆற்றிய அரும்பணி ஒப்பிட முடியாதது. சுனாமி பேரழிவின்போது பாதிக்கப்பட்ட கடலோர கிராமங்களுக்கு உடனடியாக இலவச மருத்துவ ஊர்திகள் அனுப்பப்பட்டதுடன், 48000க்கும் மேற்பட்ட நிவாரணப் பணியாளர்கள், காவலர்கள் மற்றும் இராணுவ ஊழியர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பிட அவர்களுக்கு மீன்பிடி வலைகள், படகுகள், மேலும் சத்குருவால் வடிவமைக்கப்பட்ட சுனாமி மற்றும் புயல் ஆகியவற்றால் பாதிக்கப்படாத வீடுகள் கட்டித்தரப்பட்டன. முன்னால் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கோயம்பத்தூரில் நடந்த இந்த நிகழ்ச்சிக்காக 04.செப்டம்பர் 2015 ஆன்று கலந்து கொண்டார்.
ஈஷா வித்யா - ஈஷா கல்வித் திட்டம் : -
கிராமக் குழந்தைகளின் மேம்பாட்டிற்காக, சத்குரு அவர்களின் தொலைநோக்குப் பார்வையால் உருவான கல்வித்திட்டம் ஈஷா வித்யா. உயர்தரமான கல்வியினை கிராமக் குழந்தைகளுக்கு வழங்குவதன் வாயிலாக அவர்களைப் பேணிக் காப்பதும், அவர்களது வளர்ச்சியினை முன்னெடுத்துச் செல்வதும் இப்பள்ளியின் நோக்கமாகும்.
இந்தப் பள்ளிகளின் முக்கிய நோக்கம் தன்னம்பிக்கை, கணிப்பொறி ஆளுமை, நவீன உலகின் சவால்களை எதிர்கொளளும் திறன், ஆகியவற்றை வெளிக்கொணர்தலே. கணிப்பொறி அறிவினையும், ஆங்கிலப் பேச்சாற்றல் மிக்க இளம் சமூகத்தினரையும் உருவாக்கிட, கணிப்பொறியினை அடிப்படையாகக் கொண்ட கல்விமுறை இங்கே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இக்கல்வித் திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் தாலூக்காவிற்கு ஒன்றாக மொத்தம் 216 பள்ளிகள் துவக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தற்போது தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் இயங்கிக்கொண்டிருக்கும் 8 ஈஷா வித்யா பள்ளிகளில் சுமார் 4050 மாணவர்கள் கல்வி கற்கிறார்கள்.
ஈஷா ஹோம் ஸ்கூல்
: -
சத்குரு அவர்களின் நீண்டகாலக் கனவு மற்றும் தொலைநோக்குப் பார்வையால் ஈஷா ஹோம் ஸ்கூல் துவங்கப்பட்டுள்ளது. ஈஷா ஹோம் ஸ்கூல் தரமான கல்வியினை சவாலுடனும், ஊக்கத்துடனும், இல்லம் போன்ற சூழலில் வழங்குகிறது. குழந்தைகளின் உள்ளிருக்கும் இயல்பான திறமைகளை ஒளிரச்செய்து, கற்கவும் தெரிந்து கொள்ளவும் இப்பள்ளி ஊக்குவிக்கிறது. இது குறிப்பிட்ட எந்த மதத்தினையும், எந்த தத்துவத்தினையும், எந்த கருத்தினையும் சார்ந்திராமல், வாழ்க்கையின் அடிப்படை குறித்த உள்நிலைப் புரிதலை ஏற்படுத்தி, வாழ்க்கை அனுபவங்களை ஆழமாக்க ஊக்குவிக்கிறது.
அனுபவமும் சர்வதேசத் தரமும் வாய்ந்த பல தேசத்து ஆசிரியர்கள் இங்கு பணிபுரிவதால் மாணவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள கற்றுக்கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டுதல் எளிதாகிறது. மேலும் இங்கு படிப்பறிவோடு, வாழ்க்கையின் முக்கிய அம்சங்களை அறிந்து கொள்வதை ஊக்கப்படுத்துதலும் கவனத்தில் கொள்ளப்படுகின்றது.
ஈஷாயோக மையத்தில் இருக்கும் சிறப்பு அம்சங்கள்
தியானலிங்கம் - Dhyanalingam : -
தியானலிங்க கருவறைக்கு வெளியே, ஓர் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் இரு புறங்களிலும், பக்கத்திற்கு மூன்றாக, ஆறு சுவர் சிற்பங்கள், தென்னிந்திய யோகிகளின் வாழ்க்கையை சித்தரிக்கின்றன. அவைகள்
- கண்ணப்ப நாயனார்: குழந்தையின் அன்புணர்வுடன் தன் கண்ணையே சிவனுக்கு அளிக்கிறார்.
- அக்காமாதேவி: பக்தியும் துறவும் மிகுந்த அக்கம்மாதேவி, அரசனின் கட்டளை ஏற்று, தான் உடுத்தியிருந்த ஆடை உட்பட அனைத்தையும் துறந்து, உடலுணர்வு அற்ற நிலையில் இருக்கிறார்.
- பூசலார்: தனது உள்ளத்தில் கட்டிய கோவிலுக்கு இறைவன் எழுந்தருளல்.
- மெய்ப்பொருள் நாயனார்: ஒரு சிவபக்தன், தன் உயிருக்கும் மெலாக சிவனை போற்றுகிறான் என்பதற்கான காட்சி.
- சற்குரு பரப்பிரம்மா: தடைப்பட்ட சாதகன் ஒருவனுக்கு, தெய்வீக குரு தன் அருளாற்றலை வழங்குதல்.
- சதாசிவ பிரம்மேந்திரர்: உடல் உணர்வு கடந்த யோகி.
லிங்க பைரவி கோயில் - Linga Bhairavi Temple : -
லிங்கபைரவி கோயில் , இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு பிரபலமான இந்து கோயிலாகும் . இது கோயம்புத்தூரிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் வெள்ளியங்கிரி மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயில் சக்தியின் உக்கிர அம்சத்தைக் குறிக்கும் தெய்வீக பெண்மையின் வடிவமான பைரவி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
லிங்கபைரவி கோயில் தனித்துவமானது, ஏனெனில் அதில் பாரம்பரிய சிலைகள் அல்லது தெய்வங்கள் இல்லை. அதற்கு பதிலாக, கோயிலில் தெய்வத்தின் சக்திவாய்ந்த சக்தி வடிவம் உள்ளது, இது திடமான கருப்பு கிரானைட்டால் ஆன ஒரு பெரிய, மூன்றரை அடி உயர லிங்கத்தால் குறிக்கப்படுகிறது. லிங்கம் புனித சாம்பல் நிரப்பப்பட்ட ஒரு வட்ட குழியால் சூழப்பட்டுள்ளது, மேலும் லிங்கத்திலிருந்து வெளிப்படும் சக்தியை அதன் அருகில் நிற்கும் பக்தர்கள் உணர முடியும் என்று கூறப்படுகிறது.
இந்தக் கோயில் வளாகத்தில் விநாயகர் மற்றும் சிவன் போன்ற பிற தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பல சிறிய கோயில்களும் உள்ளன. இந்தக் கோயிலின் கட்டிடக்கலை தனித்துவமானது மற்றும் நவீனமானது, பாரம்பரிய கோயில் கட்டிடக்கலை மற்றும் சமகால வடிவமைப்பின் கூறுகளை உள்ளடக்கிய தனித்துவமான பாணியுடன் உள்ளது.
லிங்கபைரவி கோயில் ஒரு பிரபலமான யாத்திரைத் தலமாகும், இது உலகளவில் ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கிறது. இந்த தெய்வம் ஒருவரின் வாழ்க்கையை மாற்றி, வெற்றி, செழிப்பு மற்றும் நல்வாழ்வுக்கான ஆசீர்வாதங்களை வழங்குவதாக நம்பப்படுகிறது.
வெள்ளியங்கிரி மலைகளின் அழகிய இயற்கை சூழலையும் பார்வையாளர்கள் கண்டு ரசிக்கலாம். இந்த மலைத்தொடர் அதன் அழகிய அழகுக்காக அறியப்படுகிறது மற்றும் மலையேற்றம் செய்பவர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களிடையே பிரபலமானது. அருகிலுள்ள சிறுவாணி நீர்வீழ்ச்சிகள் மற்றும் அமராவதி அணை ஆகியவையும் பிரபலமான சுற்றுலா தலங்களாகும்.
"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"
கருத்துரையிடுக